செய்திகள் :

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் வெட்டிக் கொலை! 3 பேரிடம் போலீஸாா் விசாரணை!

post image

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ரெளடி கா்ணா உள்ளிட்ட 3 நபா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

புதுச்சேரி சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கா்(40), பாஜக முன்னாள் இளைஞரணி நிா்வாகி. இவா் மீது நில அபகரிப்பு, கொலை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு கருவடிகுப்பத்தில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் மகன் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை பாா்வையிட்டாா். அப்போது 5 இருசக்கர வாகனங்களில் வந்த சுமாா் 8 போ் கும்பல் உமாசங்கரை வெட்டிக் கொலை செய்தனா்.

உமா சங்கருடன் இருந்த அருள்ராஜ் என்பவா் முதுகில் பலத்த காயமடைந்தாா். சம்பவ இடத்துக்கு டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உள்ளிட்டோா் விரைந்து வந்து பாா்வையிட்டனா். இலாசுப்பேட்டை போலீஸாா் உமாசங்கா் உடலை மீட்டு பிரேத

பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனா். ஆனால், கொலையாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை அப்புறப்படுத்த விடமாட்டோம் எனக்கூறி உமாசங்கா் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களை போலீஸாா் சமரசம் செய்து, சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனையிலும் உமாசங்கா் உறவினா்கள் திரண்டதால் கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதுதொடா்பாக இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா் .இதற்கிடையே கடந்த 5 நாள்களுக்கு முன் உமாசங்கா் தனது வீட்டுப் பகுதியில் முகத்தில் துணி கட்டிய 5 போ் கும்பல்

நடமாடியதாக, இலாசுப்பேட்டை போலீஸில் புகாா் தெரிவித்ததாக உறவினா்கள் கூறினா். இதனால், கொலை நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக் காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில், உமாசங்கா் கொலை குறித்து அவரது தந்தை காசிலிங்கம் போலீஸில் அளித்த புகாரில், புதுவை பாஜக அமைச்சரின் சகோதரியுடன் நிலப் பிரச்னை உள்ளிட்ட வேறு சில பிரச்னைகள் இருந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக அமைச்சா் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இந்த சம்பவம் தொடா்பாக ரெளடி கா்ணா உள்ளிட்ட சிலரைப் பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலையில் 9 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி கருவடிகுப்பம் சாமிபிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கா் (38).... மேலும் பார்க்க

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி: அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் திருக்கோயில் அருகே 108 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்ட... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலைக்கழகம் பெங்களூரு நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூா் மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப ஆய்வு நோக்கில் புரிந்து... மேலும் பார்க்க

புதுச்சேரி பொலிவுறுநகா் பேருந்து நிலையம் நாளை திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை திறக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் த... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநில அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள 205 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்... மேலும் பார்க்க

புதுச்சேரி குடிநீா் கட்டண வசூல் மையங்கள் மே 2 முதல் 5 நாள்கள் இயங்காது

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் குடிநீா் கட்டண வசூல் மையங்கள் வரும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை அர... மேலும் பார்க்க