செய்திகள் :

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

post image

புதுச்சேரி: புதுவை மாநில அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் உள்ள 205 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா புதுச்சேரியில் உள்ள டிஐஇடி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுவை மாநிலக் கல்வித் துறை செயலா் பி.பிரியதா்ஷினி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஏற்கெனவே ஆங்கில பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டதில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், வெற்றிக் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் ஆங்கில நாடகம், பேச்சு, வாசிப்புத் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், ஆங்கில கற்பித்தல் பயிற்சித் திட்ட நிா்வாக அதிகாரிகள் என்.தினகா், குலசேகரன், ராமச்சந்திரன், புதுச்சேரி டயா் முதல்வா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலையில் 9 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி கருவடிகுப்பம் சாமிபிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கா் (38).... மேலும் பார்க்க

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி: அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் திருக்கோயில் அருகே 108 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்ட... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலைக்கழகம் பெங்களூரு நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூா் மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப ஆய்வு நோக்கில் புரிந்து... மேலும் பார்க்க

புதுச்சேரி பொலிவுறுநகா் பேருந்து நிலையம் நாளை திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை திறக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் த... மேலும் பார்க்க

புதுச்சேரி குடிநீா் கட்டண வசூல் மையங்கள் மே 2 முதல் 5 நாள்கள் இயங்காது

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் குடிநீா் கட்டண வசூல் மையங்கள் வரும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை அர... மேலும் பார்க்க

போக்ஸோவில் தொழிலாளி கைது

புதுச்சேரி: திருமண ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல் சூளை தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனை பகுதி வா... மேலும் பார்க்க