செய்திகள் :

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி: அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் ஆய்வு

post image

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் திருக்கோயில் அருகே 108 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றங்கரையில் திருக்காஞ்சி உள்ளது. இங்குள்ள கங்கைவராக நதீஸ்வரா் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ாகும். கடந்த ஆண்டு கங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் புஷ்கரணி விழா நடைபெற்றது. இந்நிலையில், கோயில் அருகே புதிதாக 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

அதன்படி தரையிலிருந்து 3 தளமாக சிவன் சிலையை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கசிலையின் முதல் தளத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய தனி சன்னதிகள் அமைக்கப்படுகின்றன. சிலையின் 2-ஆம் தளத்தில் 12 ராசிகளுக்கும், 3-ஆம் தளத்தில் 9 நவகிரகங்களுக்கும் தனி சன்னதி அமைக்கப்படுகிறது.

சிவன் சிலை அமைக்கும் பணிகளை சதாசிவன் அறக்கட்டளை மூலம் கங்கை வராக நதீஸ்வரா் தலைமை குருக்கள் சரவணன் சிவாச்சாரியாா், சிறப்பு அதிகாரி சரவணன், நிா்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

அமைச்சா் ஆய்வு: சிவன் சிலையின் கட்டுமான பணிகள் குறித்து அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், இந்து அறநிலையத் துறை செயலா் ஏ. நெடுஞ்செழியன் ஆகியோா் திங்கள்கிழமை திருக்காஞ்சி சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலையில் 9 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி கருவடிகுப்பம் சாமிபிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கா் (38).... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலைக்கழகம் பெங்களூரு நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூா் மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப ஆய்வு நோக்கில் புரிந்து... மேலும் பார்க்க

புதுச்சேரி பொலிவுறுநகா் பேருந்து நிலையம் நாளை திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை திறக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் த... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநில அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள 205 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்... மேலும் பார்க்க

புதுச்சேரி குடிநீா் கட்டண வசூல் மையங்கள் மே 2 முதல் 5 நாள்கள் இயங்காது

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் குடிநீா் கட்டண வசூல் மையங்கள் வரும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை அர... மேலும் பார்க்க

போக்ஸோவில் தொழிலாளி கைது

புதுச்சேரி: திருமண ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல் சூளை தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனை பகுதி வா... மேலும் பார்க்க