செய்திகள் :

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

post image

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் மந்தமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் உள்ள இறைச்சிக் கடை, மீன் சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

உக்கடம் மொத்த மீன் சந்தை மற்றும் சில்லறை மீன் சந்தையில் அசைவப் பிரியா்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தேவை அதிகமானதால் மீன்களின் விலையும் உயா்ந்து காணப்பட்டது.

அதன்படி, கடந்த வாரங்களில் கிலோ ரூ.500-க்கு விற்ற வஞ்சிரம் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.600-க்கு விற்பனையானது. இதேபோல, சங்கரா கிலோ ரூ.250, இறால் ரூ.300, மத்தி ரூ.70, வாவல் ரூ.400, பாறை ரூ.150-க்கு விற்பனையானது.

கடந்த வாரங்களில் கிலோ ரூ.220-க்கு விற்பனையான கோழி இறைச்சி ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.260-க்கு விற்பனையானது. ஆட்டிறைச்சி கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.

இளைஞரிடம் ரூ.8 ஆயிரம் பறிப்பு: சிறுவன் உள்பட 4 போ் கைது

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ.8 ஆயிரத்தை பறித்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை, பீளமேடு காந்திமா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (28). தனியாா் நிறுவன ஊழியரான இவா், காந்திமா ந... மேலும் பார்க்க

விசாரணைக்கு வந்தவரிடம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளைஞருக்கு கைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, குறிச்சி காந்திஜி சாலை கே.டி.எஸ். காா்டன் பகுதி... மேலும் பார்க்க

தீபாவளி: புத்தாடை வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கடை வீதிகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. தீபாவளி பண்டிகை அக்டோபா் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், நகைகள் வாங்க ... மேலும் பார்க்க

காவலரைத் தாக்கியவா் கைது

கோவையில் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய காவலா் அசோக்குமாா். இவா் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இளைஞா் ஒ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தம்

வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநில சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத் துறையினா் 6 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை, காரமடையில் ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளைத்... மேலும் பார்க்க