செய்திகள் :

புல்லட், மெட்ரோ ரயில்களை காலி செய்துவிடும் ஹைப்பர்லூப் ரயில்! சென்னையில் சோதனை ஓட்டம்

post image

மெட்ரோ ரயில், புல்லட் ரயில்களை எல்லாம் காலி செய்துவிடும் அளவுக்கு உருவாகி வருகிறது ஹைப்பர்லூப் ரயில் சேவை. விரைவில் இது சென்னையில் சோதனை ஓட்டம் நடத்தப்படவிருக்கிறது.

புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 450 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும் நிலையில், இந்த ஹைப்பர்லூப் ரயிலின் வேகம் மணிக்கு 1,100 கிலோ மீட்டர் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் போக்குவரத்து அமைப்பையே முற்றிலும் மாற்றிவிடும் அளவுக்கு புரட்சியை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக உருவாகியிருக்கிறது ஹைப்பர்லூப் ரயில் சேவை. இதன் சோதனை முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் வழித்தடம் தயாராக உள்ளது.

இது குறித்த செய்தியை ரயில்வே அமைச்சர் விடியோ மூலம் வெளியிட்டுள்ளார். சென்னை -ஐஐடி வளாகத்துக்குள், அதன் மாணவர்கள் உருவாக்கியிருக்கும் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் பாதையில், சோதனை ஓட்டம் நடைபெறவிருப்பதாகவும், இந்த முயற்சிக்கு, இந்திய ரயில்வேயின் நிதியுதவி சென்னை ஐஐடிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஹைப்பர்லூப் ரயில் சேவையில், ஒரு வெற்றிடக் குழாய் தான் ரயில் பாதையாக இருக்கும். அதற்குள் அதிவேகத்தில் ரயில் பயணிக்கும். இதனால், மிக வேகமாக மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். இந்த வெற்றிடக் குழாய்க்குள் ரயிலானது மணிக்கு 1,100 கிலோ மீட்டர் வேகத்தில் பயிணிக்கும். அதாவது சென்னை - பெங்களூரு, சென்னை - திருச்சி செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் கூட ஆகாது, வெறும் 30 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், ஹைப்பர்லூப் பாதையின் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கி, வெற்றியடைந்தால், இந்தியாவில் விரைவில் ஹைப்பர்லூப் ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து அமைப்பே புதிய புரட்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர்: அண்ணாமலை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, யாருமே தொகுதி மறுவரையறை பற்றி பேசாத ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களைக் காப்பியடிக்கிறது திமுக! -தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை : மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாத முதல்வர் மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(பிப். 25) செய்தியாளர்களுடன் பேசும்போது தெரிவித்தார். புதி... மேலும் பார்க்க

'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மட்டுமல்... மேலும் பார்க்க

சென்னையில் குத்துச்சண்டை அகாதெமியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

சென்னை, கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி' கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

பிப்.27 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் பிப்ரவரி 27 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல ... மேலும் பார்க்க

ஹிந்தி எது, ஆங்கிலம் எது விளக்க மறந்தது ஏன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

உங்கள் கட்சியினருக்கு, ஹிந்தி எது, ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து ஏன் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இது பற்றி அண்ணாமலை தன்னுடைய எக்ஸ்... மேலும் பார்க்க