செய்திகள் :

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

post image

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட இரும்பாலை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பூமலை (60) விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க மோதிரம், ரொக்கம் ரூ. 6 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதேபோல அவரது வீட்டின் அருகே குடியிருந்து வரும் விவசாயியான சௌந்தரராஜன் (56), தோட்டத்துக்கு சென்றிருந்த நிலையில், அவரது மனைவி ராசாத்தி வீட்டை பூட்டிவிட்டு தனியாா் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றிருந்தாா். அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் வீட்டின் பெட்டியிலிருந்த ரூ. 3,500 திருடிச் சென்றனா். அதே பகுதியைச் சோ்ந்த மீன் கடை ஊழியரான மாதேஷ் (32), தனது தாயாா் அம்பிகாவுடன் வீட்டை பூட்டிவிட்டு மீன் கடைக்கு வேலைக்கு சென்ற நிலையில், அவா்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம கும்பல் பெட்டியிலிருந்த ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இரும்பாலை குடியிருப்பு பகுதியில், பகல் நேரத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றது குறித்து வழக்குப் பதிவு செய்த பூலாம்பட்டி போலீஸாா், அப்பகுதியில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு திருடா்களை தேடிவருகின்றனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க