செய்திகள் :

பெங்களூரு கட்டட விபத்தில் மேலும் ஒருவரின் உடல் மீட்பு: 9 ஆக உயர்ந்த பலி!

post image

பெங்களூரு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரூவில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையையடுத்து முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கட்டுமானப் பணியிலிருந்த 7 அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்துவிழுந்தது. கன மழையால் ஹென்னூர், பாபுசாபாளையா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கட்டட உரிமையாளர் மற்றும் அவரது மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேசிய பேரழிவு மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று காலை இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் ஏழுமலை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார்.

சுற்றுலா சென்ற புதுமணப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா புதுமணத் தம்பதியரைத் தாக்கி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், புதிதாய் திருமணமான தம்ப... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் புதிய பயங்கரவாத தொழிற்சாலை; தகவல்கள்

புது தில்லி: பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், மத்திய அரசால் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்டிருக்கும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக பயங்கரவாத முகாமை ... மேலும் பார்க்க

குற்றவாளிகள் பெரிய ஆள்கள் என்பதால்.. சுஷாந்த் ராஜ்புத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களிடம் காட்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் மிகப்பெரிய ஆள்கள் என்பதால்தானே என்று குறிப்பிட்டுள்ளது.மேலும், சுஷாந்த் சிங் ராஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார் வங்கக்கடலில் உருவான டானா புயல் அக்.24 நள்ளிரவில் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது. ... மேலும் பார்க்க

வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா!

மறைந்த டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.மிகப்பெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா மும்பையில் ... மேலும் பார்க்க

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணா எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக... மேலும் பார்க்க