செய்திகள் :

பெங்களூரு கட்டட விபத்து: ஒருவர் பலி; 14 பேர் மீட்பு!

post image

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் இருந்த 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 20 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

"இவ்விபத்தில் 20 பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரை காணவில்லை" என்று காவல் துறை அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

இதையும் படிக்க: வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் திரிணமூல் எம்பிக்கு காயம்

மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

"நகரத்தில் பலத்த மழை பெய்ததன் காரணமாக 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஒருவர் பலியாகியுள்ளார், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று இச்சம்பத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

பெங்களூருவில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெங்களூரில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(அக். 23)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி: நெல்லை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெரிசலை குறைப்பதற்காக அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்அக். 29-ல் சென்னை சென்ட்ரலில் இரு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 25 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கார... மேலும் பார்க்க

டானா புயல்: 28 ரயில்கள் ரத்து!

டானா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(அக். 23), நாளை மறுநாள்(அக... மேலும் பார்க்க

ஏடிஎம் கொள்ளை: வடமாநில கும்பலை பிடித்த காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு!

ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக வடமாநில கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 22) நாமக்கல் மாவட்டத்திற... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலையத்தில் பரபரப்பு! தீப்பிடித்து எரிந்த வேன்!

பெட்ரோல் நிலையத்திற்கு எரிவாயு நிரப்புவதற்காக சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.கோவை உக்கடம் அருகே பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் எரிவாயு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அ... மேலும் பார்க்க

புது வசந்தம் பட பாணியில் புதிய தொடர்!

புது வசந்தம் பட பாணியில் உருவாகியுள்ள புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.வித்தியாசமான கதையமைப்பு, விறுவிறுப்பான கதைக்களம் என சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில... மேலும் பார்க்க