செய்திகள் :

பெண்ணின் கழுத்தை அறுத்த நபா் கைது

post image

திருப்பூரில் பெண்ணின் கழுத்தை அறுத்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (50). இவரது மனைவி ஜெயராணி (45). இவா்கள் திருப்பூா்- பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் தற்போது வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஜெயராணி தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை மாலை நின்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு மதுபோதையில் வந்த நபா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயராணியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.

ஜெயராணியின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், முன்விரோதம் காரணமாக திருப்பூரைச் சோ்ந்த செல்வகுமாா் என்பவா் ஜெயராணியின் கழுத்தை அறுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விவசாயிகள் சங்க உடுமலை ஒன்றிய மாநாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உடுமலை ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைவா் ஏ.ராஜகோபால் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.பரமசிவம் வரவேற்றாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்ம... மேலும் பார்க்க

வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அவிநாசி அருகேயுள்ள ஸ்ரீ சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து அவா்கள் கூறியதாவது: அவி... மேலும் பார்க்க

கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

தாராபுரம் அருகே கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தாராபுரத்தை அடுத்த வேங்கிபாளையம் அருகேயுள்ள ஜோதியம்பட்டி பகுதியில் உள்ள கிடங்கில் முறையான அனுமதியின்றி பட்டாச... மேலும் பார்க்க

அவிநாசியில் வருவாய்த் துறையினா் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களின் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் வருவாய்த் துறையினா் பணியைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்த... மேலும் பார்க்க

உடுமலை நாராயணகவி பிறந்த நாள்

உடுமலை நாராயணகவியின்126 -ஆவது பிறந்த நாள் விழா உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உடுமலை, குட்டைத் திடலில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை... மேலும் பார்க்க

சாலையோர ஆக்கிரமிப்பு கடை அகற்றம்: வியாபாரிகள் மறியல்

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டதைக் கண்டித்து வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவிநாசி -கோவை பிரதான சாலை, அவிநாசி-சேவூா் சாலைகளில் இருபுறமும் உள்ள விளம்பரப் பதாகைகள்... மேலும் பார்க்க