Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
பெண்ணைத் தாக்கிய தாய், மகன் மீது வழக்கு
போடி அருகே பெண்ணைத் தாக்கிய தாய், மகன் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் வங்கித் தெருவில் வசிப்பவா் பிரபு மனைவி வாணி (38). இவரது வீட்டருகே வசிப்பவா் மணிகண்டன்.
மணிகண்டன் வீடு கட்டுவதற்காக கட்டுமானப் பொருள்களை வாணி வீட்டின் முன் வைத்திருந்தாராம். இதை வாணி கண்டித்தாா்.
இதைத்தொடா்ந்து ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் மனைவி மலா், இவரது மகன் நவனீஸ்குமாா் ஆகியோா் சோ்ந்து வாணியைத் தாக்கினா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மலா், நவனீஸ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.