செய்திகள் :

பெண் தோழியைக் கொன்ற இளைஞர் சிக்கியது எப்படி?காட்டிக்கொடுத்த செல்ஃபி!

post image

உத்தரப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் துரோகத்திலும் கொடூரமான கொலையிலும் முடிந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம், அகன்ஷா இருவருக்கும் இடையே இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அதுவே காதலாக மாறி அவர்கள் ஹனுமந்த் விஹாரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து லிவ்-இன் உறவில் அதில் வசித்து வந்துள்ளனர்.

ஆனால், அகன்ஷா வேறொரு ஆணுடன் பேசுவதை அறிந்ததும் இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த , ஜூலை 21ஆம் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அகன்ஷாவின் தலையை சுவரில் மோதி அவரை கழுத்தை நெரித்து சூரஜ் கொன்றுள்ளார். பின்னர் கொலையை மறைக்க சூரஜ் தனது நண்பர் ஆஷிஷ் குமாரின் உதவியை நாடியிருக்கிறார்.

அகன்ஷாவின் உடலை இருவரும் சேர்ந்து பையில் அடைத்து அதனை அப்புறப்படுத்த 100 கி.மீ தொலைவில் உள்ள பண்டாவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பையை யமுனை நதியில் வீச திட்டமிட்ட சூரஜ், அதற்கு முன்பாக பையுடன் செல்ஃபி எடுத்து அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ஸாகவும் வைத்திருக்கிறார்.

வேளச்சேரியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் காயம்

இதனிடையே ஆகஸ்ட் 8 ஆம் தேதி அந்த இளம் பெண்ணின் தாய் தனது மகள் காணாமல் போனதாகவும் அவரை சூரஜ் கடத்திவிட்டதாகவும போலீஸில் புகார் அளித்தார். இந்த நிலையில் இதுதொடர்பாக சூரஜ் உத்தமும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீஸார் விசாரித்தபோது இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் துரோகத்திலும் கொடூரமான கொலையிலும் முடிந்திருப்பது உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The couple's fight turned violent as the man banged his lover's head against a wall and then strangled her.

திருப்பதியை வைத்து அரசியல் செய்வதா? ரூ.100 கோடி உண்டியல் பணம் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

திருப்பதி கோயிலை அரசியலுக்காகப் பயன்படுத்துவதா? என்று ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் - பாஜகவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில... மேலும் பார்க்க

ஒடிசாவில் சுவர் இடிந்து பழங்குடியின தம்பதியர் பலி!

ஒடிசாவின் பலாசோர் மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மண் சுவாரின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டத்தில் உள்ள பாஸ்தா காவல் நில... மேலும் பார்க்க

ஏசி பெட்டியில் வழங்கப்படும் போர்வைகளுக்கு ஆபத்து! ரயில்வேக்கு புதிய தலைவலி

ஏசி பெட்டியில் பயணிகளின் வசதிக்காகக் கொடுக்கப்படும் போர்வை மற்றும் படுக்கை விரிப்புகளை, சில பயணிகள் தங்களது உடைமைகளுடன் எடுத்துச் செல்லும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதுவரை, ஏசி பெ... மேலும் பார்க்க

எச்-1பி விசா இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்? நாஸ்காம் விளக்கம்!

அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.49 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயா்த்தி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பினால், இந்தியர்களுக்கு எந்த வகையில் பாதிப்புகள்... மேலும் பார்க்க

கேரள கடற்கரையில் மீனவர் வலையில் சிக்கிய பாம்பு சிலைகள்!

கேரள கடற்கரையில் மீனவர் வலையில் 2 பாம்பு சிலைகள் சிக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம், அழிக்கோடு அருகேயுள்ள புதிய கடப்புரத்தில் வசித்து வருபவர் ரஸ்ஸல். இவர் ஞாயிற்றுக்கிழமை வடக்குப் பக... மேலும் பார்க்க

இன்று முதல் ஜிஎஸ்டி 2.0! ஜிஎஸ்டியே இல்லாமல் கிடைக்கும் பொருள்களின் பட்டியல்!

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், இதுவரை ஜிஎஸ்டி வரியுடன் வாங்கி வந்த சில பொருள்கள் இனி பூஜ்ய வரியில் விற்கப்படும்.ஜிஎஸ்டி... மேலும் பார்க்க