செய்திகள் :

பெண் வாடிக்கையாளர் மீது பாலியல் சீண்டல்; வைரல் வீடியோவால் பரபரப்பு

post image

பிரபல மளிகைப் பொருள் டெலிவரி நிறுவனமான பிளிங்கிட்டின் (Blinkit) டெலிவரி ஊழியர் ஒருவர், டெலிவரியின் போது தன்னைத் தகாத முறையில் தொட்டதாக ஒரு பெண் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அப்பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோவில், பொருளை டெலிவரி செய்த டெலிவரி ஊழியர், பெண்ணை தவறாகத் தொடுகிறார். இதுகுறித்து அப்பெண், தன்னைத் தகாத முறையில் தொட்டதாகவும், தொடுவதைத் தடுப்பதற்காக டெலிவரிப் பொட்டலத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. பலரும் தங்கள் அதிர்ச்சியையும் அப்பெண்ணுக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். பிளிங்கிட்டின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவைப் பிரிவு, இந்த வழக்கமான மன்னிப்பு கேட்டிருக்கிறது. ஆனால், இதுஒரு கண்துடைப்பு என்று முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் புகார்களையும், அது தொடர்பான ஆதார வீடியோவையும் நேரடியாக பிளிங்கிட் நிறுவனத்திற்கு அனுப்பியிருக்கிறார்.

இதன் உண்மைத்தன்மையையும், வீடியோ ஆதாரத்தையும் உறுதி செய்த பிளிங்கிட் நிறுவனம், சம்பந்தப்பட்ட டெலிவரி ஊழியருடனான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்துள்ளது. வாடிக்கையாளர் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என்றும் தெரிவித்திருக்கிறது. இந்த விஷயம் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலைக் கொடுக்கும் என்று தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார். இருப்பினும் சமூகவலைதள பதிவுகளை கவனித்து மும்பை காவல்துறையும் இதுதொடர்பான ஆதாரங்களையும், புகார்களையும் அனுப்ப அப்பெண்ணிடம் கேட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிருக்கிறது. இதுபோன்ற டெலிவரி விஷியங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வீட்டில் தனியாக இருந்து கொண்டு ஆன்லைனின் ஆர்டர் செய்யும் பெண்களின் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

தூத்துக்குடி : பள்ளி சிறுமி கர்ப்பம்; போக்சோவில் பள்ளி ஆசிரியர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இதே மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான மணிகண்டன் என்பவர், கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்... மேலும் பார்க்க

அயர்ன் பாக்ஸில் மின்கசிவு; சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப உயிரிழப்பு - புதுக்கோட்டையில் சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தவர் லட்சுமிபிரியா. இவர், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த சக்திமுருகன் என்பவரது மனைவி. 33 வயது நிரம்பிய இவர... மேலும் பார்க்க

முன்பகை; வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கொலை - குளித்தலையில் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நெய்தலூர் ஊராட்சி பெரிய பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது: 29). ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். இவர், திருச்சி மாவட்டம், கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

`மூலிகை தேயிலை' - வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் கஞ்சாவை கடத்தல்; சிக்கிய மும்பை போலீஸ்காரர்!

மும்பைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சில பொருட்கள் தபால் மூலம் கடத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த பார்சல்களை மும்பை விமான நிலையத்தில் ச... மேலும் பார்க்க

கரூர் 41 பலியான சம்பவம்: விசாரணையைத் தொடங்கிய ஐ.ஜி அஸ்ரா கார்க்

கடந்த 27 -ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம், இந்தியாவையே கலங்கடித்தது. இந்த ... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 3 மணி நேரம் பலத்த சோதனை

புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தருகின்றனர்.தற்போது விடுமுறை நாள் என்பதாலும் இன்று பிரதோஷம் என்பதாலும் காலையிலிருந்த... மேலும் பார்க்க