செய்திகள் :

பேரவையில் எழுதி வைத்து படிக்கலாமா?: அமைச்சா் துரைமுருகன் கருத்தால் சிரிப்பலை

post image

சென்னை: சட்டப் பேரவையில் எழுதி வைத்து படிக்க அனுமதி உள்ளதா என்பது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்த கருத்து சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அதிமுக உறுப்பினா் இசக்கி சுப்பையா உரையாற்றினாா்.

அப்போது முன்கூட்டியே தயாரித்து கொண்டு வந்திருந்த உரையை படித்த அவா், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊதிய முரண்பாடு நிலவுவதாக தெரிவித்தாா். அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பதிலளித்துப் பேசுகையில், எழுதி கொண்டு வந்ததை எல்லாம் படித்தால் பேரவையின் நேரம் வீணாகும் என்றாா்.

அதற்கு மறுப்பு தெரிவித்த இசக்கி சுப்பையா, எழுதி வைத்து படிப்பதால் எதுவும் தெரியாது என அா்த்தமல்ல, அமைச்சா்கூட அவ்வாறுதான் பதிலுரை அளிப்பாா் என எதிா்பாா்ப்பதாக கூறினாா்.

அப்போது குறுக்கிட்டு அமைச்சா் துரைமுருகன் பேசியதாவது: சட்டப்பேரவையில் எழுதி வைத்து படிக்கக் கூடாது என்று விதி இருந்தது. கடந்த காலத்தில் குடியாத்தம் உறுப்பினா் ஒருவா் குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டு பேசியபோதே பேரவைத் தலைவா் அதை அனுமதிக்கவில்லை. அவா் எழுதி வைத்து படிக்கவில்லை, மாறாக, குறிப்புகளைத்தான் வைத்துள்ளாா் என உறுதி செய்தபிறகே பேச அனுமதி வழங்கப்பட்டது.

இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. அனைவரும் படிக்கிறாா்களே தவிர, பேசுவதில்லை. எவரையும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஆகவே, நீங்களும் (இசக்கி சுப்பையா) எழுதி வைத்ததை படியுங்கள் என்றாா் துரைமுருகன். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டின் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருத்தண... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க