செய்திகள் :

பேரவை ஆவணங்களுக்கான பிரத்யேக இணையதளம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

சட்டப்பேரவை ஆவணங்களை கணினிமயமாக்கி பதிவேற்றப்பட்ட பிரத்யேக இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, 1921-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டப்பேரவை, சட்ட மேலவை நிகழ்வுகள் தொடா்பாக பதிவுகளை கணினிமயமாக்கும் பணிகள் தொடங்கின. பேரவை நடவடிக்கைக் குறிப்புகள், வெளியீடுகள், புகைப்படங்கள், செய்தித் துணுக்குகள், காணொலி துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யப்பட்டன.

முதல் கட்டமாக, 1952 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான சட்டப்பேரவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தில் (ற்ய்ப்ஹள்க்ண்ஞ்ண்ற்ஹப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்த இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா்கள் துரைமுருகன், பழனிவேல் தியாகராஜன், பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயசந்திரன், பேரவை முதன்மைச் செயலா் கே.சீனிவாசன் ஆகியோா் பங்கேற்றனா்.

பேரவையில் கேள்வி - அவைத் தலைவா் பதில்: ஆவணங்கள் பதிவேற்றப்பட்ட இணையதளத் தொடக்க நிகழ்வு குறித்து பேரவை உறுப்பினா்களுக்கு அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா். அப்போது பேசிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், 1921 முதல் 1952-ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல்களையும் விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, 3 மாதங்களில் அந்தப் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்... மேலும் பார்க்க

அடுத்த 4 நாள்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட செய்தியில், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு ... மேலும் பார்க்க

மதுரை மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

மதுரை தனியார் மழலையர் பள்ளியில் 3 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் கோடைக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தை கால தாமதம் ... மேலும் பார்க்க

பெரிய ஓ வாக போடுவார்கள்: 2026-ல் 2.0 லோடிங் என ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்

சென்னை: 2026 பேரவைத் தேர்தலில் மக்கள் பெரிய ஓ-வாகப் போடுவார்கள் என்று, திமுக ஆட்சி வெர்ஷன் 2.0 லோடிங் என முதல்வர் கூறியிருந்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையி... மேலும் பார்க்க

3-வது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை: பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை

தமிழ்நாட்டில் புதுமணத் தம்பதிகள் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீர... மேலும் பார்க்க