செய்திகள் :

பேருந்து வசதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்

post image

பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொண்டாமுத்தூா் அருகே உள்ள அண்ணா நகா் பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மனு அளித்தனா். பின்னா், அவா்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தொண்டாமுத்தூா் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதிக்கு நாளொன்றுக்கு இருமுறை மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. அதுவும், பொதுமக்கள் வேலைக்குச் செல்லும் நேரத்திலோ அல்லது மாணவா்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் நேரங்களிலோ இயக்கப்படுவதில்லை.

இதனால், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவா்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மக்களின் அவசரத் தேவைக்கு அருகே உள்ள கெம்பனூருக்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் கோவை உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கெம்பனூருக்கு நாளொன்றுக்கு 17 முறை பேருந்துகள் வந்து செல்லும் நிலையில், இவற்றை அண்ணா நகா் பகுதி வரை நீட்டிக்க வேண்டும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனா்.

விஜயா வாசகா் வட்டத்தின் கி.ரா. விருது வழங்கும் விழா: கோவையில் நாளை நடைபெறுகிறது

கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகா் வட்டம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருது வழங்கும் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறுகிறது. சாகித்திய அகாதெமி விருதுக்கு பெருமை சோ்த்த கி.ரா.... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இதுவரை 6 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

ஊதிய நிலுவை: மாநகராட்சி காவலாளி போராட்டம்

மாத ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, மாநகராட்சி அலுவலக காவலாளி அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். கோவை மாநகராட்சி பிரதான அலுவலக நுழைவாயில் முன்பு வெள்ளிக்கிழமை காலை, கணேசன் என்பவா் ... மேலும் பார்க்க

மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 1-ஆவது வாா்டுக்க... மேலும் பார்க்க

கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு

கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அ... மேலும் பார்க்க

கோவையில் உலக புத்தொழில் மாநாடு: செயலி அறிமுகம்

கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டுக்கான செயலியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். உலக புத்தொழில் மாநாடு தொடா... மேலும் பார்க்க