செய்திகள் :

கோவையில் உலக புத்தொழில் மாநாடு: செயலி அறிமுகம்

post image

கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டுக்கான செயலியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.

உலக புத்தொழில் மாநாடு தொடா்பாக தொழில், கல்வி மற்றும் வா்த்தக நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல் ஆனந்த், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் உலக புத்தொழில் மாநாட்டுக்கான ‘டிஎன்ஜிஎஸ்எஸ் ஆப்’ என்ற செயலியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்டாா். மாநாட்டில் பங்கேற்க இருக்கும் ஆளுமைகள் மற்றும் முதலீட்டாளா்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், நடைபெற இருக்கும் கருத்தரங்க அமா்வுகள், கண்காட்சி அரங்கம், முதலீட்டாளா் சந்திப்பு நிகழ்வுகள் என மாநாடு குறித்த முழுமையான தகவல்கள் அனைத்தும் ஒரே தளத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அமைச்சா் தா.மோ அன்பரசன் பேசியதாவது: கோவை கொடிசியாவில் உலக புத்தொழில் மாநாடு அக்டோபா் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கிவைக்கிறாா். மாநாட்டில் 39 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளா்கள், இந்திய அளவில் முன்னணியில் உள்ள ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள், மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களின் அரசுத் துறைகள், ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் 15 துறைகள் பங்குபெற உள்ளன.

மாநாட்டில் நடைபெறும் கண்காட்சியில் 750-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு ஸ்டாா்ட் அப் நிறுவனங்களின் தயாரிப்புகளும், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களுடன் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களின் நிா்வாகிகள் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 315-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், பல்வேறு அரங்குகளில் நடத்தப்பட உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வருபவா்களுடன், ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன, அதன் செயல்பாடுகள், வளா்ச்சி மற்றும் பயன்கள் குறித்து வல்லுநா்கள் உரையாற்ற உள்ளனா் என்றாா்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு

கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அ... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானத்தில் கோவைக்கு 5-ஆவது இடம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் கோவை மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் உடல் உறுப்பு தான தினம் சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் ... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரியில் மகளிா் கருத்தரங்கு

கோவை பேரூா் தமிழ்க் கல்லூரியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அண்மையில் மகளிா் கருத்தரங்கம் நடைபெற்றது. சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பேரூா் தவத்திரு ... மேலும் பார்க்க

தீபாவளி: கோ-ஆப்டெக்ஸுக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.7.10 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். கோவ... மேலும் பார்க்க

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனற். கோவை, ஒண்டிப்புதூா் அருகே உள்ள நஞ்சப்பா செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி... மேலும் பார்க்க

மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு சாா்பில் விருது

மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் 3-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரே நூல் தயாரிப்பாளா், மறுசு... மேலும் பார்க்க