முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படையப்பா காட்டு யானை இருந்து வந்தது. பொதுமக்கள் கொடுக்கும் உணவுப் பொருள்களை சாப்பிட்டு வந்தது.
கடந்த ஓராண்டாக படையப்பா யானையின் போக்கு மாறியது. தேயிலைத் தோட்டங்கள், ஏலத் தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. தோட்டத் தொழிலாளா்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து, அந்தப் பகுதி கடைகளில் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்கிறது. இதுவரை யாரையும் அந்த யானை தாக்கவில்லை என்றாலும் பொதுமக்கள், தொழிலாளா்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனா். வனத்துறையினா் இந்த யானையை கண்காணித்து அவ்வப்போது எச்சரித்து வருகின்றனா்.