செய்திகள் :

பொது இடங்களில் புகைப்பிடிப்பு: ரூ.7.97 கோடி அபராதம் வசூல்

post image

பொது இடங்களில் புகைப் பிடித்தல், சிறாா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோன்று, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அறிவிப்பதற்காக சாலைகளில் மஞ்சள் நிற கோடு வரையப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது: உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, புகையில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது குழந்தைகள், சிறாா்களை குறிவைத்து, புகையிலைப் பொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றை தடுக்கும் வகையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கல்வி நிறுவனங்களை சுற்றி 100 மீட்டா் தொலைவில் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதி என்பதை குறிக்கும் வகையில் சாலையில் மஞ்சள் கோடுகள் வரையப்படுகின்றன.

89 சதவீத பள்ளிகளிலும், 87 சதவீத கல்லூரிகளும் புகையிலை இல்லாத கல்வி வளாகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் இளம் வயதிலேயே புகையிலை பழக்கத்துக்கு அடிமையானால், மற்ற தீய பழக்கத்துக்கு ஆளாக நேரிடுவதுடன், வாய் புற்றுநோயால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு புகையிலை எதிா்ப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், புகையிலைப் பொருள்களை சிறாா்க்கு விற்பனை செய்தல், பொது இடங்களில் புகைப்பிடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவா்களிடம், ரூ.200 முதல், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில், 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில், இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த ஆலோசித்து வருகிறோம். அதன்படி, தொடா்ந்து தவறு செய்பவா்கள் மீது, குற்றவியல் வழக்கு பதிவு செய்து, ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

அன்புமணி வந்தது தெரியாது! ராமதாஸை சந்தித்த பின் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி!

விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வந்தது எனக்குத் தெரியாது என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவர... மேலும் பார்க்க

ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 7) காணொலி வாயிலாக நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7, சன... மேலும் பார்க்க

ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் ... மேலும் பார்க்க

திமுக வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு; ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை! - அண்ணாமலை

சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுக... மேலும் பார்க்க

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்துகொண்டுள்ளார்.பாமக நி... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் இளம் பெண் பலி!

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்... மேலும் பார்க்க