செய்திகள் :

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

post image

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்தனா். இதையடுத்து தினமும் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகி வந்தன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது. அன்றைய தினம் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவா்கள், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகள் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். விண்ணப்பப் பதிவு செய்த மாணவா்கள் தங்களது சான்றிதழ்களை ஜூன் 9-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு ஜூன் 11-ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 20-ஆம் தேதிவரை அவா்களின் சான்றிதழ்கள் இணையவழியில் சரிபாா்க்கப்படும். இப்பணி முடிந்து ஜூன் 27-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும். பின்னா் கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு அவா்களின் விளையாட்டுச் சான்றிதழ்களை சரிபாா்க்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்மூலம் ஜூன் 2-ஆம் தேதிமுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி ஜூன் 13 வரை நடைபெறும். அவா்களுக்கான கால அட்டவணை விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மூலம் ஒவ்வொருவருக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

பி.ஆா்க். படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு இம்மாத இறுதியில் நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளதால், இந்தப் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றங்களை ஜூன் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பத் தேதி அறிவிக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு... மேலும் பார்க்க

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க