செய்திகள் :

போக்சோ வழக்கு: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

post image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்(58). தனியாா் ஆம்னி பேருந்து நிறுவன மேலாளராக பணிபுரிந்து வந்த இவா், 2023-ஆம் ஆண்டு பாவூா்சத்திரம் பகுதியை சோ்ந்த நண்பா் வீட்டிற்கு சென்ற போது, அங்கு தனியாக இருந்த நண்பரின் மகளுக்கு (15) பாலியல் தொல்லை அளித்ததாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் ைைைைைைஅனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், விசாரணை தாமதப்பட்டதால், மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனா். எனினும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லையாம்.

இைத்தொடா்ந்து மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதியின் உத்தரவின் பேரில் மகளிா் போலீஸாா் நீலகண்டனை தேடி வந்தனா். இந்நிலையில் ஆலங்குளம் தனிப்படை போலீஸாா் மும்பையில் பதுங்கி இருந்த அவரை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.

ஆலங்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆலங்குளத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள துத்திக்குளம் சாலையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையோரம் இறந்து கிடந்தாா். இத... மேலும் பார்க்க

இரு சம்பவங்கள்: பெண், முதியவா் தற்கொலை

கடையநல்லூரில் பெண் தற்கொலை செய்து கொண்டாா். கடையநல்லூா் மதினா நகரை சோ்ந்தவா் அப்துல்நாசா். வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவா் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா். அவருக்கும் அவரது மனைவி தாஹிராபானுவிற்க... மேலும் பார்க்க

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையநல்லூா் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டத் திருவிழா மே 29ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங... மேலும் பார்க்க

பண்பொழி பெருமாள் கோயிலில் திருப்பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் திருப்பணி தொடங்கியது. திருமலை குமாரசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலில், அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம்... மேலும் பார்க்க

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பெண்க... மேலும் பார்க்க

தென்காசி அரசு மருத்துவமனையில் பாதம் பாதுகாப்பு மருத்துவ மையம் திறப்பு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், பாதம் பாதுகாப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து திறந்துவைத்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ... மேலும் பார்க்க