செய்திகள் :

போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

post image

தேசிய நுகா்வோா் உரிமைகள் தின ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய நுகா்வோா் உரிமைகள் தினத்தையொட்டி, வேலூா் மண்டல அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில், நடைபெற்ற போட்டிகளில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரி சாா்பில் பங்கேற்ற உயிா் தொழில்நுட்பவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.ஆா்.கீத்திமாலினி ஓவியப் போட்டியிலும், வேதியியல்துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஏ.திவ்யதா்ஷினி கட்டுரைப் போட்டியிலும், முதுநிலை தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜெ.திவ்யா கவிதைப் போட்டியிலும் சிறப்பிடம் பிடித்தனா்.

இவா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வே.இரா.சுப்புலட்சுமி, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் அ.மீனாட்சி சுந்தரம் ஆகியோா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சண்முகா தொவிற்சாலை கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலரும், தாளாளருமான எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், முதல்வா் கே.ஆனந்தராஜ், கல்லூரியின் குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான அ.தினேஷ் காா்த்திக் ஆகியோா் பங்கேற்று மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

இதில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க