செய்திகள் :

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது!

post image

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் புதன்கிழமை நண்பகல் ஆஜரானாா். போலீஸாா் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விடியவிடிய விசாரணை நடத்தினர்.

தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது என்றும் இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக கிருஷ்ணா வாக்குமூலம் அளித்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையிலும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை முதல் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கைதானவர்களுடன் கிருஷ்ணாவில் செல்போன் உரையாடலை ஆய்வு செய்யத் தொடங்கினர்.

இதில், கிருஷ்ணாவும் கைதானவர்களும் மறைமுக வார்த்தைகளால் (கோட் வேர்டு) பேசிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை போலீசார் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Summary

Chennai police have also arrested actor Krishna in a drug case.

இதையும் படிக்க : மகாராஷ்டிர தேர்தல் தகவலைத் தாருங்கள்; விவாதிக்கத் தயார்! காங்கிரஸ் அறிவிப்பு

அல்-நசீர் அணியிலேயே 2 ஆண்டு ஒப்பந்தம் நீட்டிப்பு! ரொனால்டோ அறிவிப்பு!

சௌதி லீக்கில் அல்-நசீர் அணியிலேயே 2 ஆண்டு ஒப்பந்தத்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ நீட்டித்துள்ளார்.உலக கால்பந்து ஜம்பவான் என்றழைக்கப்படும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சௌதி லீக்கில் அ... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் மூன்றாவது மற்றும் இறுதி சீசன் நெட்ஃபிளிக்ஸில் நாளை(ஜூன் 27) வ... மேலும் பார்க்க

ரஷ்மிகா மந்தனாவை சந்திக்க வேண்டுமா? புதிய படத்தின் தலைப்பில் ட்விஸ்ட்!

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம்வரும் ரஷ்மிகா மந்தனா, தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் குபே... மேலும் பார்க்க

நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் திடலில் மெஸ்ஸியின் பெயர்! சொந்த ஊரின் கிளப்புக்கு திரும்புகிறாரா?

மெஸ்ஸி சிறுவயதில் விளையாடிய விளையாட்டு திடலுக்கு அவரது பெயரை சூட்டப்பட்டுள்ளது. ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி 13-ஆவது வயது முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடினார். அதற்கு முன்புவரை அவரது சொந்த... மேலும் பார்க்க

உலகக் கோப்பை கனவு, வியாபாரம், காயம்... நெய்மரின் எதிர்காலம் என்ன?

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீண்டும் தனது சிறுவயது கிளப்பான சன்டோஷில் நீடிப்பதாகக் கூறியுள்ளார். 33 வயதாகும் நெய்மர் பார்சிலோனா அணியில் மெஸ்ஸியுடன் விளையாடி கவனம் ஈர்த்தார். பின்னர், பிஎஸ்ஜி அணிய... மேலும் பார்க்க

அய்யனார் துணை நடிகருக்கு ஆண் குழந்தை!

அய்யனார் துணை நடிகர் ஜெபின் ஜானுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடரில் எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடித்து வருகிறார். இவரின் சகோதரன் ப... மேலும் பார்க்க