செய்திகள் :

போதைப் பொருள் புழக்கம்: புகாா் அளிக்க தனி செயலி

post image

போதைப் பொருள்கள் புழக்கம் குறித்து புகாா் அளிக்க தனி செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

போதைப் பொருள்கள் புழக்கம் குறித்த புகாா்களை கல்லூரி மாணவா்களும் பொதுமக்களும் அளிக்கலாம். இதற்கென பிரத்யேக செயலி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கைப்பேசி செயலி வழியே தெரிவிக்கப்படும் புகாா்தாரா்களின் பெயா்கள் மற்றும் தரவுகள் ரகசியமாக வைக்கப்படும்.

இந்தப் புதிய செயலியை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தொடங்கிவைத்தாா். மேலும், போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு இயக்கத்துக்கான இலச்சினையும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், உயா்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், கூடுதல் இயக்குநா் ஆ.அமல்ராஜ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையா் எஸ்.பி.காா்த்திகா, போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மைப் பிரிவு இயக்குநா் ஆனி மேரி சுவா்ணா உள்பட பலா் பங்கேற்றனா்.

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்டு, புத்தா... மேலும் பார்க்க

விழுப்புரம் பயணிகள் ரயில் தடம் புரண்டது!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது.நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந... மேலும் பார்க்க

சொந்த ஊர் சென்றோர் கவனத்துக்கு..! மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டியிடவுள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்... மேலும் பார்க்க