செய்திகள் :

மகாராஷ்டிரா: காய்கறிகளை உலர வைத்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யும் பெண் - எப்படி?

post image

வந்தனா பாட்டீல்

பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். சில பெண்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு சொந்தமாக எதையாவது செய்கின்றனர். அதில் அதிகமானோர் சாதிக்கவும் செய்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்கறிகளை வாங்கி உலர்த்தி அதனை சந்தைப்படுத்தி அதில் சாதித்து வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள மெமூராபாத் என்ற இடத்தை சேர்ந்தவர் வந்தனா பாட்டீல். 50 வயதாகும் வந்தனா ஆரம்பத்தில் மற்ற பெண்களைப் போன்று சுய உதவிக்குழுக்கள் மூலம் ஊறுகாய், அப்பளம், ஸ்நாக்ஸ், மசாலாப் பொருட்களைத் தயாரித்து விற்றார்.

ஆனால் அனைத்து சுய உதவிக்குழுக்களும் இதே வேலையைச் செய்ததால் வியாபாரம் பெரிய அளவில் நடக்கவில்லை. இதையடுத்து எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று வந்தனா முடிவு செய்தார்.

ஊழியர்களுடன் வந்தனா
ஊழியர்களுடன் வந்தனா

`விவசாயிகளின் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்'

இது குறித்து வந்தனா கூறுகையில்,

''2021ஆம் ஆண்டு கிரிஷி விக்யான் கேந்திரா அலுவலகத்திற்குச் சென்றபோது போது பழங்கள், காய்கறிகளை உலர வைத்து அதனைப் பவுடராகவோ அல்லது ஃபிளேக்குகள் (செதில்கள்) செய்து விற்பனை செய்ய முடியும் என்று தெரிந்துகொண்டேன்.

அதுவும் சோலார் உலர்த்தி மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை உலர்த்துவதன் மூலம் அவற்றின் ஆயுட்காலம் அதிக நாட்கள் நீடிப்பதோடு, அதன் சத்துக்களும் குறைவதில்லை என்று தெரிந்து கொண்டேன்.

அதோடு இத்திட்டத்தின் மூலம் விலை கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகளின் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும் என்று தெரிந்துகொண்டேன்.

35% மானியம்

இதற்காக நான் பயிற்சி எடுத்துக்கொண்டு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் கடன் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் ரூ.10 லட்சம் தனிப்பட்ட கடன் வாங்கி இத்தொழிலை தொடங்கினேன்.

இதற்காக பிரதான் மந்திரி மைக்ரோ ஃபுட் பிராசஸிங் எண்டர்பிரைசஸ் திட்டத்தின் கீழ் 35% மானியம் கிடைத்தது.

2022ஆம் ஆண்டு இத்தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வந்தது. கிரீன் ஹவுஸ் போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக குழாய் போன்ற சோலார் உலர்த்தியை வாங்கினேன்.

அந்த உலர்த்தி மூலம் உள்ளே டிரேயில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் ஈரப்பதம் அகற்றப்படும்.

விருது பெறும் வந்தனா
விருது பெறும் வந்தனா

உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை வெளியேற்ற எக்ஸாஸ் பேன் பயன்படுத்துகிறோம். மின்சார உலர்த்தியை பயன்படுத்தினால் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிறம் மாறிவிடுகிறது.

இப்போது நாங்கள் முருங்கை இலை, கறிவேப்பிலை, பீட்ரூட், தக்காளி, வெங்காயம், எலுமிச்சை போன்றவற்றை உலர வைக்கிறோம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் முதலில் சுத்தமாக கழுவப்பட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டப்படுகிறது. அதன் பிறகு டிரேயில் வைக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது.

எங்களது தயாரிப்புகள் பிரேக்பாஸ்ட் பூட்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, மாலத்தீவு போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

உலர்த்தப்பட்ட தக்காளி ரூ.700

ஒரு கிலோ உலர்த்தப்பட்ட தக்காளி மற்றும் பீட்ரூட் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் 100 கிராம் ரூ.100க்கு விற்பனை செய்கிறோம். ஒரு கிலோவாக விற்றால் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ உலர்ந்த வெங்காயம் ரூ.500 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தையில் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும்.

ஒரு கிலோ உலர்ந்த தக்காளியை எடுக்க வேண்டும் என்றால் 22 கிலோ ஃப்ரெஷ் தக்காளி தேவைப்படுகிறது. இதே போன்று 4 கிலோ கறிவேப்பிலை மற்றும் முருங்கை இலையில் இருந்து தலா ஒரு கிலோ உலர்ந்த இலை கிடைக்கிறது.

ஊழியர்களுடன் வந்தனா
ஊழியர்களுடன் வந்தனா

மாதத்திற்கு ரூ.3 லட்சத்திற்கு வியாபாரம்

10 கிலோ பீட்ரூட், 10 கிலோ இஞ்சி போன்றவற்றில் இருந்து 3 கிலோ உலர்ந்த பீட்ரூட் மற்றும் இஞ்சி கிடைக்கிறது. எனவேதான் உலர்த்தப்பட்ட காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கிறது.

10 கிலோ வெங்காயத்தில் இருந்து 2.5 கிலோ உலர்ந்த வெங்காயம் கிடைக்கிறது. இப்போது ஒரு மாதத்திற்கு ரூ.3 லட்சத்திற்கு வியாபாரம் நடைபெறுகிறது.

கண்காட்சிகள் நடந்தால் சில நாட்களில் ரூ.8 முதல் 10 லட்சத்திற்கு வியாபாரம் நடந்துவிடும். எனது கடனை முழுமையாக அடைத்துவிட்டேன்.

இப்போது எங்களிடம் 15 பெண்கள் வேலை செய்கிறார்கள். விரைவில் இத்தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார்.

பலாப்பழ ஐஸ் க்ரீம், நாட்டுச் சர்க்கரை பால்கோவா, தேன் அத்தி... சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா!

சென்னை, வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இன்றும் நாளையும் (செப். 27 மற்றும் 28) நடைபெறும் இந்த வணிக திருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்த 220... மேலும் பார்க்க

சென்னையில் நாளை தொடங்கும் வேளாண் வணிகத் திருவிழா, சிறப்பம்சங்கள் என்ன?

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் செப்டம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு), வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா-2025’ நடைபெற உள்ளது.வேளாண் வணிகத் திருவிழ... மேலும் பார்க்க

மாடித்தோட்டத்தில் காய்கறிகள், சமைக்க சாண எரிவாயு; குடிக்க மழைநீர் - சென்னையில் வாவ் வீடு

சென்னை, அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியர் நாகலட்சுமி - பாலாஜி. நாகலட்சுமி, உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். பாலாஜி, பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இயற்கையோடு இயைந்... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில்: 10% மூலதனம் போதும், பிணையம் இல்லை; 3% வட்டியில் 2 கோடி வரை கடன்!

இந்தியா ஒரு வேளாண் நாடு. அரிசி, பால், மசாலா ஆகிய பொருள்களின் உற்பத்தியில் டாப் இடங்களைப் பிடித்துள்ளது இந்தியா. ஆனால், உற்பத்திக்குப் பிறகு, இந்தப் பொருளைப் பாதுகாப்பதற்கான போதுமான கட்டமைப்பு இந்தியாவ... மேலும் பார்க்க

Robot உழவன்: "இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ" - விவசாயத்தில் எந்திரன்கள்! | Photo Album

ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ரோபோட்கள் விதை இடுதல், பாசனம், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தல், அறுவடை போன்ற விவசாயப் பணிகளைச் செய்தால் எப்படி இருக்கும்?ரோபோட் உழவன் விவசாயம்ரோ... மேலும் பார்க்க