செய்திகள் :

மகாராஷ்டிரா: "ஜனவரிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்" - உச்ச நீதிமன்றம் உத்தரவு

post image

மகாராஷ்டிராவில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட தொடர் மாற்றம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குத் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற காரணங்களால் இத்தேர்தலை நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காமலிருந்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இம்மனு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது 4 வாரத்திற்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நான்கு மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.

ஆனால் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் இது வரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. உச்சநீதிமன்றத்தின் கெடு இந்த மாதத்தோடு முடிவடையும் நிலையில் இவ்வழக்கு மீண்டும் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மகாராஷ்டிரா தேர்தல்
மகாராஷ்டிரா தேர்தல்

இதில் குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தல் நடத்தப்படாதது குறித்து மாநில தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், தேர்தலை நடத்த ஒரு சலுகை வழங்குவதாகவும், வரும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேற்கொண்டு காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை நடத்துவதில், ஏதாவது உதவி தேவைப்பட்டால் அக்டோபர் 31ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும், அதன் பிறகு காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், "தேர்தலை நடத்த எவ்வளவு ஊழியர்கள் தேவை என்பது குறித்து இரண்டு வாரத்திற்குள் மாநில தேர்தல் ஆணையம் மாநிலத் தலைமைச் செயலாளருக்கு அறிக்கை கொடுக்கவேண்டும். மாநிலத் தலைமைச் செயலாளர் மற்ற துறை செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்துத் தேவைப்படும் ஊழியர்களை 4 வாரத்திற்குள் கொடுக்கவேண்டும்.

மகாராஷ்டிரா அரசு
மகாராஷ்டிரா அரசு

தேர்தலை நடத்த தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இது தொடர்பாக வரும் நவம்பர் 4ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு கிளைகளில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் ஒரே கிளையின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" - சரத்குமார்

திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில... மேலும் பார்க்க

திமுக முப்பெரும் விழா: "காலில் விழுந்த பிறகு முகத்தை மறைக்க கர்சிஃப் எதற்கு?" - EPS-ஐ சாடிய ஸ்டாலின்

கரூரில் தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது (செப்டம்பர் 17).இந்த விழாவில், பெரியார் விருது கனிமொழிக்கும், அண்ணா விருது சுப. சீத்தாராமனுக்கும், கலைஞர் விருது சோ.மா. ராமச்சந்திரனுக்கும், பாவேந... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: உத்தவ் - ராஜ் தாக்கரே கூட்டணி? கலக்கத்தில் காங்கிரஸ்; உத்தவ் சொல்வது என்ன?

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் மேயர் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும... மேலும் பார்க்க

காசா: தலையிலும் மார்பிலும் பாய்ந்த தோட்டாக்கள்; குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டது அம்பலம்

காசாவில் இஸ்ரேல் ராணுவம் குழந்தைகளைக் கொலை செய்வது தவறுதலான நிகழ்வு அல்ல, திட்டமிடப்பட்ட தாக்குதல் என வெளிநாட்டு மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.நிபுணர்கள் சொல்வதென்ன?அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக... மேலும் பார்க்க

கோயில் யானை விவகாரம்: "அம்பானியின் வந்தாரா சரணாலயத்திற்கு மாற்றுவதில் தவறில்லை" - சுப்ரீம் கோர்ட்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத்தில் நடத்தும் வந்தாரா விலங்கியல் பூங்காவில், நூற்றுக்கணக்கான யானைகள், புலிகள் மற்றும் பிற விலங்குகள் உள்ளன.குஜ... மேலும் பார்க்க

"இந்திராகாந்தி - பண்டாரநாயக்கா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த லாயக்கற்ற பாஜக அரசு" - வேல்முருகன்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன் பிடித் துறைமுகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், 'மீனவர்களின் விசைப்படகுகளும், பின்னால் இருக்கும் அவலங்களும்' என்ற தலைப்பில் மத்திய அரசைக் கண்டித்து க... மேலும் பார்க்க