செய்திகள் :

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

post image

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீ ட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் கூறி, மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில், அவா் மீது சென்னை மாநகர இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா் நீதிமன்றம், விசாரணை என்ற பெயரில் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில், மத ஒற்றுமையை சீா்குலைத்து சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் மதுரை ஆதீனம் பேசியதால்தான் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணைக்கு அவா் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆதீனம் தரப்பில், போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படுகிறது. சிலா் சீருடையில்லாமல் வந்து விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அப்போதே முடிந்து போய் இருக்கும். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் போலீஸாா் அரசியல் கண்ணோட்டத்துடன் வழக்குப்பதிவு செய்து பெரிதுபடுத்தியுள்ளதாக கருத்து தெரிவித்தாா்.

பின்னா் இந்த வழக்கின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை போலீஸாா் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதுவரை மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் நீட்டித்து உத்தரவிட்டாா்.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலைவினாடிக்கு 17,069 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,269 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வ... மேலும் பார்க்க

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவு!

சென்னையில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழையால் மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவானது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ... மேலும் பார்க்க

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

சென்னை: ஃபிடே செஸ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உஸ்பெகிஸ்தானில் நடை... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ண... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தா... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். சோ்க்கை பதிவு செப். 30 வரை நீடிப்பு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளின் காலி இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு செப். 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா... மேலும் பார்க்க