செய்திகள் :

மதுரை: ``கால்நடை, பிராணி வளர்க்க 50 மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம்.. ஏன்?'' -கொந்தளிக்கும் மக்கள்

post image

"சைக்கிளுக்கு 50 ரூபா, பைக்கிற்கு 100 ரூபா, காருக்கு 300, லாரிக்கு 500, ரயிலுக்கு 1000, பிளைட்டுக்கு 5000 ரூபா" என்று வைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் டோக்கன் போடச்சொல்வது செம காமெடியாக இருக்கும்.

அதுபோல் வீட்டு விலங்குகள் வளர்ப்பதற்கு மதுரை மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார்கள்.

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சியின் 36-வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்களும், துணை மேயரும், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட எம்.எல்.ஏக்களும் பல்வேறு கோரிக்கைகளையும், புகார்களையும் கூறினார்கள். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புதிய கட்டண விவரம்

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், கால்நடை மற்றும் பிராணிகளை வளர்க்க உரிமம் பெற கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வகையில், மாடு, பன்றி வளர்க்க ரூ 500 ;நாய், பூனைக்கு ரூ 750; ஆடு வளர்க்க ரூ.150 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பு மதுரை மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கெனவே ஆண்டுக்கு 10 ரூபாய் உரிமக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும்போது, இப்படி 50 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது ஏன்? பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள நிலையில், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் சாமானிய மக்கள் வளர்க்கும் கால்நடைகள் மீது அதிகமான உரிமக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது மோசமான நடவடிக்கை என்கிறார்கள்.

இது உடனே நடைமுறைக்கு வரவில்லை, மக்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்த கட்டண விகிதம் பின்பு மாற்றி அமைக்கப்படலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 2 வயதாகப் போகிறது. குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. ஒன்றேகால் வயதில் ஒருமுறை யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து, மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். ஆன்டிபயாட்டிக் கொடுத்த... மேலும் பார்க்க

Cooking Vessels: அவை வெறும் சமையல் பாத்திரங்கள் அல்ல... நோய் தடுப்பான்கள்! - பாத்திரங்களின் பலன்கள்

மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. 'எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்... மேலும் பார்க்க

`அரசியல் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம்; அதில் குடும்பத்துக்கு தொடர்பு இல்லை' -ஆதவ் அர்ஜூனா மனைவி

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா சில நாள்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார்.நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர... மேலும் பார்க்க

US: ``Gold Card Visa வாங்கி, இந்தியர்களை வேலைக்கு எடுங்க...'' - என்ன சொல்கிறார் ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கோல்ட் கார்டு என்னும் விசா திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தினார். அதுக்குறித்து ட்ரம்ப் பேசியிருப்பதாவது, "கோல்ட் கார்டு சீக்கிரம் விற்று தீர்ந்துவிடும். அமெரிக்காவில் உ... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் இந்திக்கு பதிலாக ஆங்கில எழுத்தை அழித்த திமுகவினர்... வைரலாகும் வீடியோ

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த இரு தினங்களாக ரயில் நிலையத்தில் உள்ள ஊர் பலகைகளில் ஹிந... மேலும் பார்க்க