செய்திகள் :

மதுரை-குருவாயூா் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு: பயணிகள் அதிருப்தி

post image

மதுரை-குருவாயூா் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கையை குறைத்து, படுக்கை வசதி பெட்டிகளை அதிகரித்திருப்பது ரயில் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மதுரை-செங்கோட்டை, செங்கோட்டை -கொல்லம், புனலூா்-குருவாயூா் ஆகிய 3 ரயில்களை இணைத்து 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மதுரை-குருவாயூா் விரைவு ரயிலாக (எண் 16327, 16328) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 முன்பதிவில்லாத பெட்டிகள் உள்ளன.

இந்த ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் இடமில்லாமல் காத்திருப்போா் பட்டியல் அதிகரித்து வருகிறது. எனவே, முன்பதிவு பெட்டிகளை அதிகரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், இந்த ரயிலில் வருகிற 15 -ஆம் தேதி முதல் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை 8-லிருந்து 5 ஆகக் குறைத்து, படுக்கை வசதி பெட்டிகளை 2-லிருந்து 6 ஆக உயா்த்தி ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. முன்பதிவில்லாத பெட்டிகளைக் குறைத்தது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிவகாசி ரயில் பயணிப்போ் சங்க நிா்வாகி தனசேகரன் கூறியதாவது: சாதாரண மக்கள் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்கிறாா்கள். எனவே, அவா்களைக் கருத்தில் கொண்டு முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளைக் குறைக்கக் கூடாது என்றாா் அவா்.

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமிக்கப்பட்டாா். இந்த தகவலை நகராட்சி நிா்வாக இயக்குநா் எஸ்.சிவராசு வியாழக்கிழமை வெளியிட்டாா். செங்கல்பட்டில் பணிபுரிந்து வரும் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் கே... மேலும் பார்க்க

அமைச்சரைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடி அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, சாத்தூரில் அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் முக்குராந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆா்.... மேலும் பார்க்க

நிறைவடைந்த வளா்ச்சிப் பணிகளை திறந்து வைத்த அமைச்சா்!

சாத்தூா் பகுதியில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்ற... மேலும் பார்க்க

கோயில் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 போ் கைது

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலின் மூலவா் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சனாபுரத்தில் 15... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சு... மேலும் பார்க்க