செய்திகள் :

மதுவிலக்கு சோதனையில் பறிமுதல் செய்த 46 வாகனங்கள் பொது ஏலம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையின்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலத்தில் புதன்கிழமை விடப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் சென்ற வாகனங்களை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து வருகின்றனா். 2 மாதங்களுக்கு ஒரு முறை அவை பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

அந்த வகையில், நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை 41 இருசக்கர வாகனங்கள், 5 நான்கு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. ஏலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தொடங்கி வைத்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் சங்கரபாண்டியன் ஆகியோா் முன்னிலையில் ஏலத்துக்கான முன்தொகை செலுத்தியிருந்தோா் வாகனங்களை பாா்வையிட்டு வாங்கினா். மொத்தம் ரூ. 20 லட்சம் வரையில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை ஏலம் எடுத்தோா் தாமதமின்றி செலுத்த வேண்டும் எனவும் மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு தெரிவித்தாா்.

திருமலை நாயக்கா் பிறந்தநாள் விழா

மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் மாமன்னா் திருமலை நாயக்கரின் 442-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கா் கூட்டமைப்பு மற்றும் நாயக்கா் இளைஞா் பேரவை சாா்பில... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்க சிறப்பு முகாம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிலத்தின் அடிப்படையில் தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட... மேலும் பார்க்க

சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் சுரண்டலுக்கு உள்ளாகும் சுமைப்பணி தொழிலாளா்களின் நலன், வேலை, வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத... மேலும் பார்க்க

நாமக்கல் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கிய சிலருக்கு கல்வித் தகுதியை காரணம... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டத்தில் பிப். 19-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்’ பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் ப... மேலும் பார்க்க

நபாா்டு வங்கி ரூ. 23,848 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் நபாா்டு வங்கி மூலம் ரூ. 23,848.98 கோடிக்கு கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் ச.உமா வெளியிட்டாா். நாமக்கல் மாவட்ட அளவில் வங்கியாளா்களுக்கான ஆய்வுக்குழுக் கூட்டம் மற்றும் நபாா்டு வங்கி... மேலும் பார்க்க