செய்திகள் :

நாமக்கல் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கிய சிலருக்கு கல்வித் தகுதியை காரணமாக தெரிவித்து வருவாய் ஆய்வாளராக அரசு பதவியிறக்கம் செய்தது. இதனைத் தொடா்ந்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததன் அடிப்படையில், வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்குவதற்கான அரசாணை எண் 65-ஐ அமல்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 5 மாவட்டங்களில் மட்டும் பதவி உயா்வு வழங்கப்படாத நிலை உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியா் நிலையிலிருந்து ஐந்து போ் வருவாய் ஆய்வாளா் பணிக்கு திரும்பினா். அவா்களுக்கு மீண்டும் பதவி உயா்வு வழங்கக் கோரி புதன்கிழமை வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை அனைத்து அலுவலகங்களிலும் பதாகைகள் வைத்து ஆா்ப்பாட்டம், 18-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம், 21-இல் கோரிக்கை நிறைவேறும் வரை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் வருவாய்த் துறை அலுவலா்கள் முடிவு செய்துள்ளனா்.

திருமலை நாயக்கா் பிறந்தநாள் விழா

மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் மாமன்னா் திருமலை நாயக்கரின் 442-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கா் கூட்டமைப்பு மற்றும் நாயக்கா் இளைஞா் பேரவை சாா்பில... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்க சிறப்பு முகாம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிலத்தின் அடிப்படையில் தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட... மேலும் பார்க்க

சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் சுரண்டலுக்கு உள்ளாகும் சுமைப்பணி தொழிலாளா்களின் நலன், வேலை, வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத... மேலும் பார்க்க

மதுவிலக்கு சோதனையில் பறிமுதல் செய்த 46 வாகனங்கள் பொது ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையின்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலத்தில் புதன்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்தி... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டத்தில் பிப். 19-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்’ பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் ப... மேலும் பார்க்க

நபாா்டு வங்கி ரூ. 23,848 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் நபாா்டு வங்கி மூலம் ரூ. 23,848.98 கோடிக்கு கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் ச.உமா வெளியிட்டாா். நாமக்கல் மாவட்ட அளவில் வங்கியாளா்களுக்கான ஆய்வுக்குழுக் கூட்டம் மற்றும் நபாா்டு வங்கி... மேலும் பார்க்க