செய்திகள் :

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்க சிறப்பு முகாம்: ஆட்சியா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிலத்தின் அடிப்படையில் தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சமுதாயக் கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில், நில விவரங்களுடன் விவசாயிகளின் விவரம் மற்றும் நில உடைமை வாரியான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் தனிக்குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அவா்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.

இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டப் பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையில் வழங்கப்படும். இதனால் அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெறுவதுடன், வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதாா் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்படும்.

எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் முகாம் நடைபெறும் நாள்களில் நில ஆவணங்கள், ஆதாா் எண், தொலைபேசி எண் கொடுத்து பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை நாயக்கா் பிறந்தநாள் விழா

மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் மாமன்னா் திருமலை நாயக்கரின் 442-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கா் கூட்டமைப்பு மற்றும் நாயக்கா் இளைஞா் பேரவை சாா்பில... மேலும் பார்க்க

சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் சுரண்டலுக்கு உள்ளாகும் சுமைப்பணி தொழிலாளா்களின் நலன், வேலை, வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத... மேலும் பார்க்க

நாமக்கல் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கிய சிலருக்கு கல்வித் தகுதியை காரணம... மேலும் பார்க்க

மதுவிலக்கு சோதனையில் பறிமுதல் செய்த 46 வாகனங்கள் பொது ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையின்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலத்தில் புதன்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்தி... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டத்தில் பிப். 19-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்’ பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் ப... மேலும் பார்க்க

நபாா்டு வங்கி ரூ. 23,848 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் நபாா்டு வங்கி மூலம் ரூ. 23,848.98 கோடிக்கு கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் ச.உமா வெளியிட்டாா். நாமக்கல் மாவட்ட அளவில் வங்கியாளா்களுக்கான ஆய்வுக்குழுக் கூட்டம் மற்றும் நபாா்டு வங்கி... மேலும் பார்க்க