செய்திகள் :

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை!

post image

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் தனி இடம்பிடித்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகர் ஸுபீன் கர்க். இந்த நிலையில், கடந்த வாரம் சிங்கப்பூருக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ஸுபீன் கர்க்(52), அங்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ள இறப்புச் சான்றிதழில் ஸுபீன் கர்க் மறைவுக்கு மேற்கண்ட காரணமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ஸுபீன் கர்க்கின் உடலுக்கு குவாஹாட்டி மருத்துவ கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(செப். 23) காலை 7.30 மணியளவில் குவாஹாட்டி எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ஸுபீன் கர்க்கின் இறப்புச் சான்றிதழ் வேறு, பிரேதப் பரிசோதனை அறிக்கை வேறு, ஆகவே அங்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை விவரங்களை சிங்கப்பூர் அதிகாரிகளிடம் வினவியிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, அன்னாரது உடலுக்கு இறுதிச்சடங்கும் குவாஹாட்டி அருகே கமர்குச்சி என்சி பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நாளை மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Second postmortem of Zubeen Garg's body to be conducted on Tuesday at Guwahati hospital: Assam CM

பெண் எம்.பி.யின் விடியோ இணையத்தில் வெளியீடு? சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

மாநிலங்களவை பெண் எம்.பி.யின் விடியோ இணையத்தில் வெளியானதாக இணைய வழியில் மிரட்டல் விடுத்த மர்மநபரைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். பெங்களூரில் வசிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சுத... மேலும் பார்க்க

புகைப்பிடித்தல் காட்சியால் சர்ச்சை: ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை?

ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.தடை செய்யப்பட்ட இ-சிகரெட்களை சினிமா காட்சிகளில் பயன்படுத்தியதற்காக நடிகர் ரன்பீர் கபூர், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம... மேலும் பார்க்க

ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!

புது தில்லி: அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின் முன்னாள் கிரிகெட் வீரர் ராபின் உத்தப்பா வீட்டுக்கு திரும்பினார். சட்டவிரோதமாகச் செயல்படும் செயலி ஒன்றின் மீதான புகாரில் ராபின் உத்தப்பாவுக்கு தொடர்பிருப்ப... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பில் ஹிந்துக்களை பிரிக்கிறது காங்கிரஸ்: பாஜக

கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமானது அல்ல என பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். அசோகா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியாவில்... மேலும் பார்க்க

பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் முதல்வர் அல்ல!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் முகமாக பார்க்கப்படவில்லை என லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவரும் எம்.பி.யுமான சிராக் பாஸ்வன் தெரிவித்துள்ளார். பிகாரில் செய்தியாளர்களுடன் அவர் பேசி... மேலும் பார்க்க

தங்கள் மீதான ரூ.100 கோடி திருட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஒய்எஸ்ஆர் காங். அமித் ஷாவுக்கு கடிதம்!

திருப்பதி திருமலைக் கோவிலில் பக்தர்கள் செலுத்திய பரகாமணி காணிக்கையில் ரூ. 100 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ... மேலும் பார்க்க