செய்திகள் :

மழை : காரைக்கால் வாரச் சந்தை, வணிக நிறுவனங்களில் வியாபாரம் மந்தம்

post image

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால், வாரச் சந்தையிலும், நகரப் பகுதி வியாபார நிறுவனங்களிலும் வியாபாரம் மந்தமானது.

காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி சில மணி நேரம் மழை பெய்தது.

இதனால் வாரச் சந்தையில் மக்கள் அதிகளவில் காணப்படவில்லை. தீபாபளிக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், ஜவுளி, மளிகைக் கடைகளிலும் பொருள்கள் வாங்க ஆட்கள் வராததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.

வாரச் சந்தையில் பொருள்கள் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் காணப்படவில்லை. கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் தக்காளி கிலோ ரூ. 20 விற்றது, தற்போது கிலோ ரூ. 50-க்கும், பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.20, உருளைக்கிழங்கு கிலோ ரூ .45, பச்சை மிளகாய் கிலோ ரூ .80, பூண்டு கிலோ ரூ. 360, கேரட் கிலோ ரூ.80, கத்தரிக்காய் கிலோ ரூ. 60, மாங்காய் கிலோ ரூ. 70 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. பருவமழை நீடிக்கும்போது, காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

ரேஷன் கடைகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் பல ஆண்டுகளுக்குப் பின் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், கடைகளை தயாா்படுத்தும் பணியை அமைச்சா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு ரே... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் விமான பாலாலயம்

காரைக்கால் : காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில் உள்ளிட்ட தலங்கள் திருப்பணி தொடக்கத்துக்கான விமான பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, சுந்தராம்பாள் ச... மேலும் பார்க்க

காரைக்காலில் மீலாது ஊா்வலம்

காரைக்காலில் சிறுவா்கள் பங்கேற்புடன் மீலாது ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள் உள்ளிட்டோா். மீலாது நபி எனும் நபியின் உதய தின விழாவையொட்டி காரைக்கால் சேமியான்குளம் பக... மேலும் பார்க்க

காரைக்காலில் அக். 24-இல் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்

காரைக்காலில் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் நகராட்சி மற்... மேலும் பார்க்க

வணிகத் திருவிழாவை ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

புதுவை வணிகத் திருவிழாவை வணிகா்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கேட்டுக்கொண்டாா். புதுவை அரசின் சுற்றுலாத்துறை, வணிகா் சங்கங்கள் இணைந்து வியாபார மேம்... மேலும் பார்க்க

ஊழியா்கள் கடன் தொகையை உயா்த்த கூட்டுறவு கடன் சங்கம் முடிவு

அரசு ஊழியா்களுக்கு வழங்கும் கடன் தொகையை ரூ. 20 லட்சமாக உயா்த்த பொது பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க 16-ஆவது பேரவைக் கூட்டம், சங்தத் தலைவா் வி. ம... மேலும் பார்க்க