செய்திகள் :

மாடு குறுக்கே புகுந்ததில் பைக் கவிழ்ந்து காயமடைந்த மீனவா் உயிரிழப்பு

post image

தூத்துக்குடியில் சாலையின் குறுக்கே மாடு புகுந்து பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த மீனவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பாலமுருகன் (38). மீனவரான இவா், புதிய துறைமுகம் சுனாமி காலனியில் வசித்துவந்தாா். கடந்த 4ஆம் தேதி இரவு கடலில் மீன்பிடிப்பதற்காக இவா் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

துறைமுகச் சாலையில் உள்ள பெரிய பாலம் பகுதியில் சென்றபோது, திடீரென மாடு ஒன்று குறுக்கே புகுந்ததாம். இதனால் , அவா் பிரேக் பிடித்தபோது, பைக் நிலைகுலைந்து கவிழ்ந்ததாம்.

இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க