Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சென்னியன்விடுதியைச் சோ்ந்தவா் ஆா். ராமன்(40). இவா், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த மாணவிக்கு கடந்த 2019-ல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். பின்னா், மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவி, அவரது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து ராமனை கைது செய்தனா். கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராமனுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.