செய்திகள் :

"மாண்பில்லாத இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ்

post image

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

குன்னூர், ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி வந்தார்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
எடப்பாடி பழனிசாமி

கூடலூரில் நேற்று உரை நிகழ்த்திய எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வம் பெருந்தகையின் அரசியல் வாழ்க்கை குறித்துப் பேசுகையில், யாசகர்களின் சட்டையைப் போன்றது எனக் கொச்சை மொழியில் இழிவாகப் பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு அ.தி.மு.க தொண்டர்களை அப்போதே முகம் சுழிக்கச் செய்திருக்கிறது. இந்தச் சர்ச்சை பேச்சு தற்போது இணையத்தில் பரவி கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்துத் தெரிவித்த நீலகிரி காங்கிரஸ் கமிட்டியினர், "ஓட்டை, கிழிசல் சட்டை அணிபவர்களை இழிவு படுத்தும் விதமாக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விளிம்புநிலை மக்களால் ஆட்சியில் அமர்ந்துவிட்டு அவர்கள் குறித்தே இழிவாகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

எடப்பாடி பழனிசாமி

தேர்தலில் தோல்வி பயம், உட்கட்சி பிரச்னையால் பதவி பயம் போன்ற காரணங்களாலேயே இப்படிக் கொச்சையாகப் பேசியிருக்கிறார். மாண்பில்லாத இ.பி.எஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் விளிம்புநிலை மக்களை இழிவாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி மீது நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாளை புகார் மனு அளிக்க இருக்கிறோம் " என்றனர்.

Ladakh violence: போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு யார் காரணம்; மத்திய அரசின் அறிக்கை சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக்கை, மத்திய பாஜக அரசு 2019-ல் அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமாக மாற்றியது.இதனால், லடாக்கின் நீண்டநாள் கோரிக்கையான மாநில... மேலும் பார்க்க

லடாக் போராட்டம்: "சர்வாதிகார பாஜக-வால் முழு நாட்டுக்குமான போராட்டமாக மாறும்" - கெஜ்ரிவால் எச்சரிக்கை

பாஜக தலைமையிலான மத்திய அரசால் 2019-ல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து (அரசியலமைப்பு பிரிவு 370) நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன.இதில், ஜ... மேலும் பார்க்க

``காந்திஜியை மாற்றிவிட்டு கோட்சே, சாவர்க்கரை கொண்டுவர மத்திய அரசு திட்டம்'' - பினராயி விஜயன் ஆவேசம்

ஜனநாயக மாதர் சங்க மாநாடுஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்றது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சுஇதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொ... மேலும் பார்க்க

கைம்பெண்களின் சொத்து வழக்கு: "திருமணமானால் பெண்ணின் கோத்திரம் மாறும்" - உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

திருமணமான இந்து பெண் வாரிசு இல்லாமல், அதேசமயம் உயில் எழுதி வைக்காமல் இறந்து போகும் பட்சத்தில் அவரது சொத்து கணவன் வீட்டாருக்குச் சொந்தம் என்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்ட... மேலும் பார்க்க

கழுகார்: `கறி விருந்து வைத்த மாஜியின் பிளான்' டு அடிக்கப் பாய்ந்த சூரியக் கட்சிப் பிரமுகர் வரை

வேகமெடுக்கும் சிட்டிங் தலைமை!டெல்லி போட்ட உத்தரவு...மலர்க் கட்சியின் டெல்லி மேலிடம், சிட்டிங் தலைமைக்கு சில உத்தரவுகளைப் போட்டிருக்கிறதாம். அதன்படிதான், சார்பு அணிகளுக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் நிய... மேலும் பார்க்க

"காமராஜருக்குப் பிறகு நல்ல தலைவர்" - இபிஎஸ் தொகுதியில் 'அண்ணாமலை ரசிகர் மன்றம்' - அதிர்ச்சியில் பாஜக

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க கலை மற்றும் கலாசார பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் தங்கமணி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணா... மேலும் பார்க்க