செய்திகள் :

கைம்பெண்களின் சொத்து வழக்கு: "திருமணமானால் பெண்ணின் கோத்திரம் மாறும்" - உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

post image

திருமணமான இந்து பெண் வாரிசு இல்லாமல், அதேசமயம் உயில் எழுதி வைக்காமல் இறந்து போகும் பட்சத்தில் அவரது சொத்து கணவன் வீட்டாருக்குச் சொந்தம் என்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.

இம்மனு மீதான விசாரணையின்போது கொரோனா காலத்தில் ஒரு தம்பதி இறந்துவிட்டதையும், அதில் இறந்த பெண்ணின் சொத்துக்கு அப்பெண்ணின் தாயாரும், அப்பெண்ணின் கணவனின் தாயாரும் உரிமை கோருவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதே போன்று மற்றொரு தம்பதி குழந்தை இல்லாமல் இறந்து போனார்கள். அவர்களின் சொத்துக்கு இறந்து போன ஆணின் சகோதரி உரிமை கோரினார். இதில் ஆஜரான வழக்கறிஞர், இது பொதுநலன் சார்ந்த பிரச்னை என்பதால் இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதில் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டின் ஒரே பெண் நீதிபதியான நாகரத்னா, ''இந்து சமூகம் 'கன்யாதான்' என்ற கருத்தைக் கொண்டுள்ளது. அதன் கீழ் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளும்போது, ​​அவளுடைய கோத்திரம், அதாவது ஒரு குலம் மாறிவிடுகிறது என்று அதில் கூறுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையில் சுப்ரீம் கோர்ட் தலையிட விரும்பவில்லை. ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டால் அப்பெண்ணிற்கு கணவனும், அவரது வீடும்தான் பொறுப்பாகும்.

திருமணமான பெண்கள் தங்களது சகோதரனிடம் பராமரிப்புச் செலவு கேட்டு விண்ணப்பத்து கிடையாது. தென்னிந்தியத் திருமண சடங்குகளில் பெண் ஒரு கோத்திரத்தில் இருந்து மற்றொரு கோத்திரத்திற்கு மாறுவதாகக் கூறுகிறது'' என்று நீதிபதி தெரிவித்தார்.

தற்போது திருமணமான விதவை பெண் வாரிசு இல்லாமல் அதேசமயம் உயில் எழுதாமல் இறந்தால் அவரின் சொத்துக்கள் கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும் வகையில் சட்டம் இருக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்துத்தான் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீதான மேல் விசாரணை வரும் நவம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

``காந்திஜியை மாற்றிவிட்டு கோட்சே, சாவர்க்கரை கொண்டுவர மத்திய அரசு திட்டம்'' - பினராயி விஜயன் ஆவேசம்

ஜனநாயக மாதர் சங்க மாநாடுஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்றது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சுஇதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொ... மேலும் பார்க்க

கழுகார்: `கறி விருந்து வைத்த மாஜியின் பிளான்' டு அடிக்கப் பாய்ந்த சூரியக் கட்சிப் பிரமுகர் வரை

வேகமெடுக்கும் சிட்டிங் தலைமை!டெல்லி போட்ட உத்தரவு...மலர்க் கட்சியின் டெல்லி மேலிடம், சிட்டிங் தலைமைக்கு சில உத்தரவுகளைப் போட்டிருக்கிறதாம். அதன்படிதான், சார்பு அணிகளுக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் நிய... மேலும் பார்க்க

"காமராஜருக்குப் பிறகு நல்ல தலைவர்" - இபிஎஸ் தொகுதியில் 'அண்ணாமலை ரசிகர் மன்றம்' - அதிர்ச்சியில் பாஜக

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க கலை மற்றும் கலாசார பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் தங்கமணி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணா... மேலும் பார்க்க

"முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அதிக அளவு வடமாநில வீரர்கள்?" - குற்றச்சாட்டுக்கு உதயநிதி பதில்

"உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை முதன் முறையாக தமிழகத்தில் நடைபெறுகிறது" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆய்வுப்பணிமதுரை வந்திருந்த துணை ... மேலும் பார்க்க

Stalin-க்கு திகில் கிளப்பிய உளவுத்துறை ரிப்போர்ட் , தனிகட்சி Annamalai?! | Elangovan Explains

'எம்பிக்கள் அனைவரும் மக்களுடன் பயணிக்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன' என அலெர்ட் கொடுத்திருக்கும் மு.க ஸ்டாலின். மந்திரிகள்,எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இடையே நல்லுறவு இல்லை என்பதால்... மேலும் பார்க்க

பீகாரில் போட்டியிடும் Anbumani தரப்பு? | UN கூட்டத்திலும் INDIA -வை சீண்டிய TRUMP | Imperfect Show

* ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்! - எடப்பாடி* எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை என்.டி.ஏக்கு வர முடியாது! - டிடிவி* விஜய்க்கு எதிராக நான் போட்டியிடப்போறேனா? - சீமான் ப... மேலும் பார்க்க