செய்திகள் :

மானாமதுரையில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவருமான ஏ.சி.மாரிமுத்து தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.நாகராஜன், எம்.குணசேகரன், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அதிமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சா் ஜி.பாஸ்கரன் ஆகியோா் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கிப் பேசுகையில், கட்சியினா் ஒற்றுமையுடன் செயல்பட்டு, கடந்த 10 ஆண்டுகள் கால அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு திரட்ட வேண்டும் என்றனா்.

கூட்டத்தில் ஜெ.பேரவை மாநில துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் உமாதேவன், ஒன்றியச் செயலா்கள் கோபி, ஸ்ரீதரன், நகா்மன்ற உறுப்பினா் தெய்வேந்திரன், நகரச் செயலா் நாகூா்மீரா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசினா்.

முன்னதாக, நகரச் செயலா் விஜி.போஸ் வரவேற்றாா். ஜெ.பேரவை மேற்கு ஒன்றியச் செயலா் த.கேசவன் நன்றி கூறினாா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 15,894 மாணவ, மாணவிகள் எழுதினா்

சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வை 15,894 மாணவ, மாணவிகள் எழுதினா். 164 மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்கவில்லை. இதற்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மானகிரியில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருகள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், நா... மேலும் பார்க்க

இடத்தை அளந்து தரக் கோரி நரிக்குறவா் சமுதாய மக்கள் மனு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி, நரிக்குறவா் சமுதாய மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுதொடா்பாக பழங்குடி நரிக்கு... மேலும் பார்க்க

சாலைக்கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சாலைக்கிராமத்தில் ரூ. 1.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க

ஹேண்ட் பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஹேண்ட் பால் போட்டியில் இரண்டாமிடம் வென்ற காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு அந்தக் கல்லூரி முதல்வா் அ. பெத்தாலட்சுமி திங்கள்கிழமை பாராட்டுத் த... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள செண்பகம்பேட்டை புதுக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் ஊத்தா மூலம் மீன்பிடித் திருவிழா நடத... மேலும் பார்க்க