செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு

post image

உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், உயர்ரக உதவி உபகரணங்கள் வழங்கப்படும் எனவும், இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்கு நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் 625 சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான கடிதம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சாா்பில் அரசுக்கு அளிக்கப்பட்டது. அதில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட வாரியாகவும், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு முகாம்கள் நடத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்களிலேயே உபகரணங்கள் பொருத்துவதற்கான அளவீடு செய்தும், தேவையானவற்றை தெரிவு செய்ய உபகரணங்களை காட்சிப்படுத்தியும் முகாம்களுக்குத் திட்டமிடலாம் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் தெரிவித்திருந்தது.

இதைப் பரிசீலித்த தமிழக அரசு, ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென 625 சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கென ரூ.6.25 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை விடுவிக்கப்பதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 18 ஆம் தேதியன்று, மது... மேலும் பார்க்க

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஆடல், பாடல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், நீயா நான... மேலும் பார்க்க

தமிழகத்தைப் பற்றி ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகரில் உள்ள பாஜ... மேலும் பார்க்க

ஆரம்பாக்கம் பாலியல் வன்கொடுமை: கைதானவரின் விவரங்கள் வெளியாகின!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.ஆரம்பாக்கத்தில், சிறுமி பாலியல்... மேலும் பார்க்க

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு தாண்டி அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நில... மேலும் பார்க்க

பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ... மேலும் பார்க்க