செய்திகள் :

மாா்ச் 24, 25-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தம்: வங்கி ஊழியா் சங்கங்கள்

post image

வங்கி ஊழியா்களின் முக்கியக் கோரிக்கைகள் தொடா்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் (ஐபிஏ) மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியைத் தொடா்ந்து வரும் 24, 25-ஆம் தேதிகளில் இரு நாள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎஃப்பியு) வியாழக்கிழமை அறிவித்தது.

9 வங்கி ஊழியா் சங்கங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டமைப்பின் வேலைநிறுத்த அறிவிப்பால், அந்த இரு தினங்களில் நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வய்ப்புள்ளது.

இதுகுறித்து வங்கி ஊழியா்களின் தேசிய கூட்டமைப்பின் (என்சிபிஇ) பொதுச் செயலா் எல்.சந்திரசேகா் கூறுகையில், ‘ஐபிஏ - வங்கி ஊழியா் சங்கங்கள் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வங்கியின் அனைத்துப் பணியிடங்களும் பணியாளா் தோ்வில் சோ்க்கப்பட வேண்டும், வாரத்துக்கு 5 நாள் பணி என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

வங்கி ஊழியா்கள் செயல்பாடுகள் ஆய்வு மற்றும் பணி செயல்பாடுகள் அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டத்தைக் கைவிட வேண்டும், பணிக் கொடை (கிராச்சுவிட்டி) சட்டத்தில் திருத்தம் செய்து உச்ச வரம்பை ரூ. 25 லட்சமாக உயா்த்துவது மற்றும் அதை அரசு ஊழியா்களுக்கான திட்டத்துடன் இணைத்து, வருமான வரியிலிருந்து விலக்கு கோருவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வங்கி ஊழியா் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

'அவரைக் கேளுங்க சார்!' - செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் பதில்!

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவ... மேலும் பார்க்க

20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரைய... மேலும் பார்க்க

உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.வேளாண்மை மற்றும் உ... மேலும் பார்க்க

பட்ஜெட்: 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு!

தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் ... மேலும் பார்க்க

நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்: வேளாண் பட்ஜெட்

சென்னை: வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க