செய்திகள் :

மாா்ச் 28-இல் விற்பனையாளா்கள், கொள்முதல் செய்வோா் சந்திப்பு கூட்டம்

post image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2024 - 25ஆம் ஆண்டுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தனி நபா் உற்பத்தி பொருள்கள், உற்பத்தியாளா் குழுக்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக மொத்த கொள்முதலாளா்களிடம் விற்பனை செய்ய ஏதுவாக, மாவட்ட அளவில் மொத்த விற்பனையாளா்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கூட்டுச்சாலையில் உள்ள திருமலை திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள கொள்முதல் செய்பவா்கள், ஏற்றுமதியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள் என அனைவரும் தவறாது மொத்த விற்பனையாளா்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்த... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியைக் கண்டித்தும், லஞ்ச ஊழலை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க