செய்திகள் :

முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்

post image

தில்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது முகத்தைத் துடைத்தேன், அதை வைத்து அரசியல் செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தில்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செவ்வாய்க்கிழமை இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிட மத்திய அமைச்சரை சந்திந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு அமித் ஷாவின் வீட்டைவிட்டு காரில் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, தனது முகத்தை மூடிக் கொண்டு செல்வதைப் போன்ற காணொலி இணையத்தில் வைரலானது.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "எடப்பாடி பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்று அழைக்க வேண்டும். வானிலை காரணமாக தனது சுற்றுப்பயணத்தை தள்ளிவைப்பதாக கூறிவிட்டு, தில்லிக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு ஏற்கெனவே ஊடகங்களில் வந்த செய்திதான். ஆனால், பொய் கூறி விட்டுச் செல்வது ஏன்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி இதற்கு பதிலளிக்கும் வகையில்,

'நான் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது கைக்குட்டையை வைத்து முகத்தைத் துடைத்தேன். உடனே முகமூடி அணிந்தார் என அதை வைத்து மலிவான அரசியல் செய்கின்றனர். நான் முகமூடி அணியவில்லை.

டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்து அதிமுகவில் நுழைந்தார். 19.12.2012ல் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஜெயலலிதா கையெழுத்திட்ட ஆவணம் இருக்கிறது. பின்னர் ஜெயலலிதா மறைந்தபிறகுதான் அவர் அதிமுகவுக்கு வந்தார். அப்படிப்பட்ட அவர் என்னைப்பற்றி பேசுகிறார். இது தேவையில்லை. அவர் எந்த உள்நோக்கத்துடன் பேசுகிறார் என்று தெரியவில்லை. அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணமும் தெரியவில்லை. என்னை பற்றி விமர்சிப்பதற்கு டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை.

அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என்று அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டார். பாஜகவுக்கு அமித் ஷா, அதிமுகவுக்கு நான் சொல்வதே இறுதியானது.

செங்கோட்டையன் குறித்து, கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

I wiped my face with hand kerchief: EPS

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

காஸாவில் நடக்கும் சம்பவங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "காஸா மூச்சுத் திணறுகிறது, உ... மேலும் பார்க்க

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

தமிழகத்தில் 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பிகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவ... மேலும் பார்க்க

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்... மேலும் பார்க்க

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

திராவிடக் கொள்கை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளதாகவும், அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியுள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்று கூ... மேலும் பார்க்க

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் பேசும்போது கனிமொழி, கர்ஜனை மொழியாக மாறுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள செயல் வீரர் செந்தில் பாலாஜி எனவும் அ... மேலும் பார்க்க

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

கரூரில் திமுக முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா மேடைக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் படங்களுக்கு ... மேலும் பார்க்க