செய்திகள் :

``கர்நாடகாவின் இந்தத் தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளன; இது தொடர்கிறது!'' -ராகுல் காந்தி

post image

வாக்குத் திருட்டு குறித்து பேச மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது...

"நான் எதிர்க்கட்சித் தலைவராக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது மிக வலுவான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைக்க உள்ளேன்.

கர்நாடகாவில் ஆலந்து என்கிற தொகுதி இருக்கிறது. அங்கே யாரோ 6,018 வாக்குகளை அழிக்க முயன்றிருக்கிறார்கள்.

2023-ம் ஆண்டு தேர்தலின்போது, ஆலந்து தொகுதியில் மொத்தம் எத்தனை வாக்குகள் அழிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

அது 6,018-ஐ விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், 6,018 வாக்குகளை அழிக்கும்போது, ஒருவர் எதர்ச்சையாக பிடிப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பூத் அளவிலான அதிகாரி தன்னுடைய சொந்தகாரர் ஒருவரின் வாக்கு அழிக்கப்பட்டுள்ளதைக் கவனித்திருக்கிறார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தான் அந்த வாக்கை அழித்திருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்.

அது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது, நான் எந்த வாக்கையும் அழிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

யார் அந்த வாக்கை அழித்தார்... யாருடைய வாக்கு அழிக்கப்பட்டது என்பது எதுவும் தெரியவில்லை. ஏதோ ஒன்று இந்த பிராசஸை நிறுத்தி, வாக்கை அழித்திருக்கிறது.

குறி

இந்தியா முழுவதும் மையப்படுத்தப்பட்ட சாப்ட்வேர்கள் மூலம் மில்லியன் கணக்கான காங்கிரஸ் வாக்குகளை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சியினர், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு போடப்படும் வாக்குகள் தான் குறிவைக்கப்படுகின்றன.

இதுகுறித்து நாங்கள் பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதுதான் 100 சதவிகித ஆதாரம் கிடைத்திருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதிக வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கும் முதல் 10 வாக்குச் சாவடிகள் காங்கிரஸ் சாவடிகள் ஆகும். ஜனநாயகத்தை அழிப்பவர்களைக் காப்பதை ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேசம் என அடுத்தடுத்து பெரிய அளவிலான வாக்குகள் நீக்கம் நடந்து வருகிறது.

இப்படி ஜனநாயகத்தை அழிப்பவர்களைக் காப்பதை ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"கலைஞர் மட்டுமே அரசியலை சினிமாவைப் போல் சிந்தித்தவர்; சினிமாவை அரசியலாக மாற்றியவர்" - யுகபாரதி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாளான நேற்று (செப்டம்பர் 17), தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், முத்தமிழறிஞர் கலைஞர் சொற்பொழிவு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

``வடிவேலு, சிவாஜிக்கு கூடாத கூட்டமா? நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்!'' - ரகுபதி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி மீது ரகுபதி விமர்சனம்புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் பாதி வழியில் கழற்றி விடுபவர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு டெல்லியில் அவர... மேலும் பார்க்க

பழனி: தார்ப்பாய் வீடுகள்; வனவிலங்கு அச்சுறுத்தல்கள்; மலசர் பழங்குடிகளின் அவலம் நிலை | Photo Album

பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்க... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காத அரசு உயரதிகாரிகளுக்கு அபராதம்!’ - தாக்கலானது மசோதா

புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து மார்ச் 12-ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்... மேலும் பார்க்க

America: வட்டியை 0.25% குறைத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி; இன்னும் குறையலாம்! - ஏன் இத்தனை குறைப்புகள்?

நேற்று அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 பேசிஸ் பாயிண்ட் அதாவது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்று தான். இருந்தாலும், இந்த வட்டி குறைப்பு என்ன செய்யும்,... மேலும் பார்க்க

``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்'' - வீடியோ காண்பித்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை... மேலும் பார்க்க