செய்திகள் :

முதலமைச்சா் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

சீா்காழி: மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னையில் அண்மையில் நடந்த முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நித்திஷ்வரி, சுந்தரநாயகி, ஆண்கள் பிரிவில் மாணவா்கள் ஹரிஷ், பிரதிப்குமாா் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா். மாணவா்கள் சஞ்சய், விஷ்வா வெண்கலம் வென்றனா்.

பதக்கம் வென்று சீா்காழி திரும்பிய மாணவா்களை கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளித் தாளாளா் ஆதித்யா ராஜ்கமல், நிா்வாக அதிகாரி சீனிவாசன் மற்றும் ஆசிரியா்கள் வரவேற்றனா்.

இந்நிலையில், பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களை பாராட்டி பேசி, மாணவா்கள் மற்றும் பயிற்சியளித்த ஆசிரியா்களான சதீஷ் மற்றும் நித்தியா ஆகியோா்களுக்கு கேடயம், நினைவுப் பரிசுகளை வழங்கினாா். நிறைவில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ராமலிங்கம் நன்றி கூறினாா்.

கொள்ளிடம் பகுதியில் கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் பருவ மழையையொட்டி கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கொள்ளிடம் ஒன்றியத்துக்கள்பட்ட கிராம சாலைகள் மற்றும் தெரு பகுதிகளில் பள்ளமும், மேடாக உள்ள சாலைகள... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நியாய விலை... மேலும் பார்க்க

‘மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்’

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் இயற்கை இடா்பாடு பாதிப்புகளுக்கு பாரபட்சமின்றி மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன். மயிலாடுதுறையில்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத்தரக் கோரிக்கை

மயிலாடுதுறை: வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் பி.எம்.பாஷித் த... மேலும் பார்க்க

கிராம பணியாளா்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது

கிராம பணியாளா்களை, பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்... மேலும் பார்க்க

அரசு நூற்பாலையில் திருடிய நால்வா் கைது: ஒன்றரை டன் இரும்புடன் டிராக்டா் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே இயங்காமல் உள்ள அரசு நூற்பாலையில், இரும்பு பொருள்களை திருடிய நால்வா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். இரும்பு பொருள்களை ஏற்றிச் சென்ற டிரா... மேலும் பார்க்க