செய்திகள் :

முதல்முறையாக சந்தித்துகொள்ளும் ட்ரம்ப், ஜின்பிங்: ஏன் இது முக்கியம்? இருவரின் எதிர்பார்ப்புகள் என்ன?

post image

தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தற்போது நடந்து வருகிறது.

தான் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜின்பிங்கை சந்தித்த ட்ரம்ப், இப்போது தான் மீண்டும் அவரை சந்திக்கிறார்.

நாளை தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள சென்ற இடத்தில் தான் ட்ரம்ப், ஜின்பிங் சந்திப்பு நடந்து வருகிறது.

இந்த இருவரின் சந்திப்பு அமெரிக்கா, சீனாவிற்கு மட்டும் முக்கியமானது அல்ல, உலக நாடுகள் அனைத்துக்குமே ஏதோ ஒரு விதத்தில் மிக முக்கியமானது.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்

ஏன் முக்கியம்?

சமீபத்தில் சீனா தான் ஏற்றுமதி செய்யும் சில அரிய கனிமங்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. 'இது உலகளாவிய வர்த்தகத்தைப் பாதிக்கும்' என்று சீனப் பொருள்களின் மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்தார் ட்ரம்ப். இதை சீனா கடுமையாக எதிர்த்தது.

இந்த நிலையில் தான், இந்தச் சந்திப்பு நடந்து வருகிறது.

எதிர்பார்ப்புகள்

இந்தச் சந்திப்பில் ட்ரம்பின் எதிர்பார்ப்பு, அமெரிக்காவின் சோயா பீன்ஸை சீனா வாங்க வேண்டும் என்பதாக இருக்கிறது. ஜின்பிங் சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

முக்கியமாக, இருவருமே வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னோக்கி உள்ளனர்.

இவை அனைத்தும் நிறைவேறுமா என்று இன்னும் சில மணிநேரத்தில் தெரிந்துவிடும்.

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க