தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை
புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதனைத் தொடா்ந்து, புதுச்சேரி மரப்பாலம், புவன்கரே வீதியில் உள்ள முன்னாள் எம்எல்ஏ எம்.ஏ.சண்முகத்தின் உருவச் சிலைக்கும் அமைச்சா் க. லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சிகளில், புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ. ராஜவேலு, எம்எல்.ஏக்கள் ஆா். பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, எல். சம்பத் ஆகியோரும் மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸாா் மரியாதை...:
முன்னாள் முதல்வா் வெங்கடசுப்பா ரெட்டியாா் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் வெங்கடசுப்பா ரெட்டியாா் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரின் படத்திற்கு தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அஞ்சலி செலுத்திய கட்சியினா்
