செய்திகள் :

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

post image

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவில் அறுந்து கிடந்து தொங்கிய மின்சார கம்பி மீது சிலை ஒன்று உரசியது. இந்த சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.

மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை அருகிலிருந்த தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவர் நகராட்சியால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

ஆனால் அதில் பினு சுகுமாரன் குமரன் (36) பலியாகிவிட்டதாக செவன் ஹில்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவித்ததாக நகராட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அதேசமயம் பாரமௌண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபான்ஷு காமத் (20), துஷார் குப்தா (20), தர்மராஜ் குப்தா (49), கரண் கனோஜியா (14) மற்றும் அனுஷ் குப்தா (6) ஆகிய ஐந்து பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A man died and five other persons were injured after coming in contact with a live electric wire during a Ganesh idol immersion procession in Mumbai on Sunday morning, civic officials said.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலை நூலகத்தில் பணி! நாளுக்கு ரூ. 525 ஊதியம்!

பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலையின் நூலகத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது, மாத ஊதியாக ரூ.1.... மேலும் பார்க்க

தூத்துக்குடி உள்பட 22 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளது.பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாகக் கிடைத்தத் தகவலின் ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி கொலை! ராணுவ வீரர் காயம்!

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுன்ரில் பயங்கரவாதி ஒருவர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாக இந்திய ராணுவம்... மேலும் பார்க்க

சளி, இருமல், காய்ச்சல்! குணமாவதில் நீடிக்கும் தாமதம்!

தலைநகர் தில்லி முழுவதும் மருத்துவமனைகளில், சளி, இருமல், காய்ச்சலுடன் நாள்தோறும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த வாரம் முழுவதும் புது தில்லியில் மழைப் பொழிவு அதிகமாக இருந்து வந்துள்... மேலும் பார்க்க

கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!

ஐந்தாவது மாதத்தில் கருச்சிதைவு ஆன நிலையில் 32 வயது பெண், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தனது கருவை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம் செய்தார்.ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த வந்தனா ஜெயினுக்கு திடீரென கருச... மேலும் பார்க்க

ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய 300 மாருதி சுசூகி கார்கள்! என்னவாகும்?

பொதுவாக மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது, கார்கள் வெள்ளத்தில் மூழ்குவது சாதாரண விஷயம் என்றாலும், ஒரே இடத்தில் 300 புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது சாதாரணம் அல்ல.ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜ்ர் மா... மேலும் பார்க்க