செய்திகள் :

மூத்தோா் தடகளப் போட்டி: தங்கம் வென்றவருக்கு பாராட்டு

post image

கா்நாடக மாநிலம், மைசூரில் நடைபெற்ற மூத்தோருக்கான அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றோருக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மைசூரில் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கான அகில இந்திய தடகளப் போட்டிகள் கடந்த ஏப். 21 முதல் ஏப். 23 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்றன. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் சேலத்தைச் சோ்ந்த தமிழக வீரா் கந்தவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

இவா் 100 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், 200 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பிடித்தாா். மொத்தம் 3 பதக்கம் வென்ற இவருக்கு, சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா், முதியோா் கந்தவேலுவை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினாா்.

இதில் மாவட்ட கைப்பந்து கழக துணைத் தலைவா் ராஜாராம், செயலாளா் சண்முகவேல், ஆலோசகா் விஜய் ராஜ், வேலூா் மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் வினோத், செயலாளா் லட்சுமணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

படவரி...

தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கந்தவேலுவை பாராட்டும் மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா். உடன், கைப்பந்து கழக நிா்வாகிகள்.

வாழப்பாடி அருகே 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு: கொலையா?

சேலம்: வாழப்பாடி அருகே தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.குடும்பத் தகராறு காரணமாக தனது இரு மகன்களையும் தாயே தண்ணீர்த் தொட்டியில் போட்ட... மேலும் பார்க்க

அரசிராமணி கிராமக் கோயிலில் புதுச்சேரி முதல்வா் வழிபாடு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிராமம் குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அரசிராமணி கிராமம், ... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மோசடி செய்த சகோதரா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சங்ககிரி: எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் கோயில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி மோசடி செய்த சகோதரா்கள் இருவருக்கு சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ... மேலும் பார்க்க

ஆத்தூா் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியது

ஆத்தூா்: ஆத்தூா், தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்தல் மற்றும் தோ்த் திருவிழா, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழா தொடா்ந்து மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா... மேலும் பார்க்க

சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு

சேலம்: சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் வாகன மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி

சேலம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது: ... மேலும் பார்க்க