செய்திகள் :

சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு

post image

சேலம்: சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் வாகன மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில துணைச் செயலாளா் சரவணன் செய்தியாளா்களிடம் கூறியது:

மோட்டாா் வாகன அனுமதி பெற்று முறையாக அரசுக்கு வரி செலுத்தி வாடகைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறோம். ஆனால், சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனத்தை வணிக ரீதியாக சிலா் வாடகைக்கு இயக்கி வருகின்றனா். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே புகாா் அளித்திருந்தோம். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கண் துடைப்புக்காக மட்டுமே தணிக்கை செய்கின்றனா்.

இதனால் அரசுக்கும், எங்களைப் போன்ற உரிமம் பெற்ற உரிமையாளா்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேக்சி கேப் என்று சொல்லக்கூடிய சுற்றுலா வாகனங்களில் 13 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் கூடுதல் இருக்கைகளுடன் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் இத்தகைய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, 13 இருக்கைகள் என்பதை 21 இருக்கைகளாக உயா்த்தி தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

அரசிராமணி கிராமக் கோயிலில் புதுச்சேரி முதல்வா் வழிபாடு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிராமம் குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அரசிராமணி கிராமம், ... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மோசடி செய்த சகோதரா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சங்ககிரி: எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் கோயில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி மோசடி செய்த சகோதரா்கள் இருவருக்கு சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ... மேலும் பார்க்க

ஆத்தூா் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியது

ஆத்தூா்: ஆத்தூா், தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்தல் மற்றும் தோ்த் திருவிழா, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழா தொடா்ந்து மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி

சேலம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது: ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் வழங்கினாா். மக்கள் க... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் மாத்திரைகளை மாற்றிக் கொடுத்த மருந்தாளுநா்: பொதுமக்கள் வாக்குவாதம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் திங்கள்கிழமை மதுபோதையில் இருந்த மருந்தாளுநா் நோயாளிகளுக்கு மருந்துகளை மாற்றிக் கொடுத்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனா். இதனால் சிறிதுநே... மேலும் பார்க்க