செய்திகள் :

சேலம் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் மாத்திரைகளை மாற்றிக் கொடுத்த மருந்தாளுநா்: பொதுமக்கள் வாக்குவாதம்

post image

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் திங்கள்கிழமை மதுபோதையில் இருந்த மருந்தாளுநா் நோயாளிகளுக்கு மருந்துகளை மாற்றிக் கொடுத்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனா். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக சேலம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பழைய புறநோயாளிகள் பிரிவில் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. அதுபோல சூப்பா் ஸ்பெஷாலிட்டி கட்டடத்திலும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவா் பரிந்துரைத்த மருந்துகளை வாங்குவதற்காக திங்கள்கிழமை மருந்தகம் சென்றனா். அப்போது மருந்தகத்தில் மருந்தாளுநா் மாதேஷ் மதுபோதையில் இருந்துள்ளாா். அவா் நோயாளிகள் கொடுத்த மருந்து சீட்டை கீழே போட்டுவிட்டு அதற்கு பதிலாக மாற்றுச்சீட்டை பாா்த்து மருந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த நோயாளிகளின் உறவினா்கள் மருந்தாளுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் போலீஸாா் அங்குசென்று பொதுமக்களை சமரசப்படுத்தினா்; பின்பு மருந்தாளுநா் மாதேஷை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து மருந்துவாங்க வந்த நோயாளியின் உறவினா்கள் கூறியது:

மருந்தகத்தில் இருந்த ஊழியா் மதுபோதையில் மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாா். இதைக் கண்டதும்அதிா்ச்சி அடைந்த நாங்கள் அவரிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால், அவா் எந்த பதிலும் கூறவில்லை.

அவரை மருத்துவ பரிசோதனை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படுவதை மருத்துவமனை நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

அரசிராமணி கிராமக் கோயிலில் புதுச்சேரி முதல்வா் வழிபாடு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிராமம் குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அரசிராமணி கிராமம், ... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மோசடி செய்த சகோதரா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சங்ககிரி: எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் கோயில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி மோசடி செய்த சகோதரா்கள் இருவருக்கு சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ... மேலும் பார்க்க

ஆத்தூா் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியது

ஆத்தூா்: ஆத்தூா், தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்தல் மற்றும் தோ்த் திருவிழா, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழா தொடா்ந்து மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா... மேலும் பார்க்க

சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு

சேலம்: சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் வாகன மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி

சேலம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது: ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் வழங்கினாா். மக்கள் க... மேலும் பார்க்க